Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

பள்ளிக் கட்டணத்தை தள்ளுபடி செய்து ஏழைகளுக்கு உணவளித்த தம்பதி!

இந்த மும்பை தம்பதி வீடு கட்டுவதற்காக சேமித்த தொகையைக் கொண்டு புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவளித்து வருகின்றனர்.

பள்ளிக் கட்டணத்தை தள்ளுபடி செய்து ஏழைகளுக்கு உணவளித்த தம்பதி!

Wednesday August 12, 2020 , 2 min Read

மும்பையைச் சேர்ந்த மிக்சா ஷேக், ஃபையாஸ் தம்பதி மலாட் நகரின் புறநகர் பகுதியில் ‘ஜீல் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்’ நடத்தி வருகின்றனர்.


கொரோனா வைரஸ் பரவும் நெருக்கடியான சூழலால் இந்தப் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களால் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த இந்தத் தம்பதி 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்துள்ளனர் என ‘தி லாஜிக்கல் இந்தியன்’ குறிப்பிட்டுள்ளது.

1

இதுதவிர தேவையானோருக்கு உணவும் வழங்கி வருகின்றனர். வேலையில்லாமல் தவிக்கும் பலர் இரண்டு வேளை உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவதை மிக்சா, ஃபையாஸ் தம்பதி கவனித்தனர். அப்போதுதான் உணவின்றி கஷ்டப்படுவோர்களுக்கு உதவி புரிந்து சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர்.

“புலம்பெயர் தொழிலாளர்களும் தினக்கூலிகளுமே இங்கு பெருமளவில் வசித்து வருகின்றனர். அவர்களின் நிலையைக் கண்டு சில என்ஜிஓ’க்களை நாங்கள் தொடர்பு கொண்டோம். கிச்சடி விநியோகிக்கத் தொடங்கினோம். இந்த முயற்சி போதுமானதாக இருக்காது என்பதை விரைவிலேயே உணர்ந்தோம். நாங்கள் நினைத்ததைக் காட்டிலும் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததைத் தெரிந்துகொண்டோம். எனவே உதவத் தீர்மானித்தோம்,” என்று மிக்சா ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இடம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தம்பதி தங்களது தனிப்பட்ட சேமிப்பைக் கொண்டு இதுவரை 1,800 பேருக்கு உணவு வழங்கியுள்ளனர். இந்தத் தொகையை இவர்கள் வீடு கட்டுவதற்காக சேமித்து வந்தனர்.

“நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். பணத்தேவை அதிகரித்தபோது என்னுடைய வருங்கால வைப்பு நிதித் தொகையைப் பயன்படுத்தத் தீர்மானித்தோம். இதுவரை 4.5 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளேன்,” என்று ஃபையாஸ் கூறினார்.

இவர்கள் இந்த முயற்சியைத் தொடங்கியதும் பலருக்கு உணவுத் தேவை இருப்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் ஒரு என்ஜிஓ மூலம் நிதியுதவு கிடைத்தது. ஆனால் தொடர்ந்து கிடைக்கவில்லை.


நாடு முழுவதும் பலர் இவர்களது முயற்சியைப் பாராட்டி வருகின்றனர். ஆனந்த் மஹிந்திரா இந்தத் தம்பதியின் செயலை டிவிட்டரில் பாராட்டியுள்ளர். இவர்களது முயற்சியில் தானும் பங்களிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


கட்டுரை: THINK CHANGE INDIA