இந்திய வளர்ச்சிக் கதையில் பங்கேற்க அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு!
அமெரிக்காவில், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தலைமை செயல் அதிகாரிகள் (சி.இ.ஓ) மத்தியில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாவது பதவி காலத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாக இந்தியா எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளும் என்றார்.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்திய வளர்ச்சிக் கதையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியா தற்போது 3.9 லட்சம் கோடி டாலர் ஜிடிபியுடன், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக 7 சதவீதத்திற்கும் அதிக ஜிடிபி வளர்ச்சியோடு வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவில், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தலைமை செயல் அதிகாரிகள் (சி.இ.ஓ) மத்தியில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாவது பதவி காலத்தில் ( 2024-29) மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாக இந்தியா எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளும் என்றார்.
உலகிற்காக இந்தியாவில் உற்பத்தி செய்ய, இணை வடிவமைப்பு, இணை உருவாக்கத்தில் ஈடுபட, புதுமையாக்கம் மற்றும் கூட்டு முயற்சி மேற்கொள்ள நிறுவனங்கள் இந்திய வளர்ச்சி கதையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மோடி கூறினார்.
அறிவுசார் சொத்துரிமையை பாதுகாப்பது மற்றும் தொழில்நுட்ப புதுமையாக்கத்தை ஊக்குவிப்பதில் இந்தியாவின் உறுதியை வலியுறுத்திய பிரதமர், நாட்டில் நிகழும் தொழில்நுட்ப மாற்றத்தை குறிப்பாக, மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப, சிப் துறைகளில் நிகழும் மாற்றத்தை சுட்டிக்காட்டினார்.
செமிகண்டக்டர் தயாரிப்பிற்கான சர்வதேச மையமாக இந்தியாவை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மோடியின் மூன்று நாள் அமெரிக்க பயணத்தின் அங்கமாக ஞாயிறு அன்று நியூயாரிக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் 15 சி.இ.ஓக்கள் பங்கேற்றனர்.
"நியூயார்க்கில் தொழில்நுட்ப சி.இ.ஓ.க்களோடு சிறந்த முறையில் உரையாடல் அமைந்தது. தொழில்நுட்பம், புதுமையாக்கம் உள்ளிட்டவை குறித்து பேசினோம். இத்துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்தேன். இந்தியா தொடர்பாக மிகுந்த நேர்நிறை சிந்தனை இருப்பதை பார்த்தேன்,” என பிரதமர் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, தொழில்நுட்ப கூட்டு முயற்சி மற்றும் முக்கிய வளரும் தொழில்நுட்பங்கள் முயற்சி ஆகியவை இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவில் முக்கிய பங்கு வகிப்பதாக, பிரதமர் தெரிவித்தார் என வெளியுறவு துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
எம்.ஐ.டி பொறியியல் கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, அடோப் சி.இ.ஓ ஷாந்தனு நாராயனா, அக்சன்சர் ஜூலியா ஸ்வீட், நிவிடியா ஜென்சன் ஹாங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வட்ட மேஜை விவாதத்தில், ஏஎம்டி சி.இ.ஓ, லிசா சூ, எச்பியின் என்ரிக் லோர்ஸ், ஐபிஎம்மின் அரவிந்த் கிருஷ்ணா, மாடர்னா நூபர் அபேயன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். உயிரி நுட்பத்தில் இந்தியாவை வளர்த்தெடுக்கும் பயோ இ 3 கொள்கை பற்றியும் மோடி குறிப்பிட்டார். ஏஐ நுட்பத்தில், அனைவருக்குமான, பொறுப்பான, அறம் சார்ந்த ஏஐ நுட்பத்தை இந்தியா முன்னெடுத்து வருவதாக கூறினார்.
புதுமையாக்க கொள்கை மற்றும் வளரும் சந்தையின் வாய்ப்புகளால் தொழில்நுட்ப மையமாக உருவாகி வரும் இந்தியாவின் முக்கியத்துவத்தை சி.இ.ஓக்கள் பாராட்டி பேசினர். இந்தியாவுடன் கூட்டு முயற்சி மற்றும் முதலீடு செய்வது பற்றியும் ஆர்வம் தெரிவித்தனர். ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வது நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்தனர்.
பயோஜென் சி.இ.ஓ. Chris Viehbacher, பிரிஸ்டல் மெயர்ஸ் ஸ்குவிப்பின் சிறிஸ் போயர்னர், இலி ல்ல்லி சி.இ.ஓ. டேவிட் ரிக்ஸ், லாம் ரிசர்ச்சின் டிம் ஆர்ச்சர், குளோபல் பவுண்டரிஸ் தாமஸ் காபீல்டு ஆகியோரும் பங்கேற்றனர்.
"நியூயார்க்கில் எம்.ஐ.டி ஏற்பாடு செய்திருந்த வட்டமேஜை மாநாட்டில் அமெரிக்க முன்னணி தொழில்நுட்பத் தலைவர்கள், சி.இ.ஓக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடி, தொழில்நுட்ப, வர்த்தக தொடர்பை மேலும் வலுவாக்கினார். இந்திய வளர்ச்சி வாய்ப்புகளை குறிப்பிட்ட பிரதமர், பல்வேறு துறைகளில் கூட்டு முயற்சி மற்றும் புதுமையாக்க வாய்ப்புகளை விவாதித்தார்,” என வெளியேறவு துறையின் எக்ஸ் பக்கம் தெரிவிக்கிறது.
”அணு மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் ஹொல்டெக் சி.இ.ஓ கிருஷ்ணா சிங்குடன் பிரதமர் தனியே பேசினார். இந்தியாவில் நிறுவன விரிவாக்கம் மற்றும் மேம்பட்ட எரிசக்தி கூட்டு முயற்சி பற்றி பேசினர்,” என பிரதமர் அலுவலக எக்ஸ் பதிவு தெரிவிக்கிறது.
முன்னதாக, பிரதமர் மோடி, லாங் ஐலாண்டில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரை நிகழ்த்தினார். ஐநா மாநாட்டிற்கு வந்திருந்த உலக தலைவர்களுடனும் அவர் பேசினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்திருந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின் மோடி நியூயார்க் வந்தடைந்தார்.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan