நேச்சுரல் ஹேன்ட்வாஷ் முதல் இயற்கை உணவுப் பொருள்கள் சந்தை விலையில்!
காட்டன் மாஸ்க், நொச்சி, அருகம்புல், மஞ்சள், வேம்பு கலந்த இயற்கை ஹேன்ட்வாஷ் உள்ளிட்ட பொருட்களை Rural Basket-ல் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடி வரும் பொருட்கள்...
உயிர் பலி வாங்கி, உலகையே விழுங்க முயற்சித்துக் கொண்டிருக்கும் கொரோனாவை வெல்ல உலக நாடுகள் அனைத்தும் தனிமைப்படுத்தலையும், ஊரடங்கையும் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றன.
வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவதையும், அவ்வப்போது கைகளை சானிடைசர்களை கொண்டு கைகளை சுத்தம் செய்வதையும் அறிவுறுத்தப் படுகின்றன. இதனால் சர்வதேச அளவில் முகக் கவசங்களுக்கும், சானிடைசர்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகள் தங்களின் சுயதேவையை கருத்தில் கொண்டு இப்பொருள்களுக்கான ஏற்றுமதியை தடை செய்துள்ளன. மேலும், சானிடைசர்கள் கிடைக்காத பட்சத்தில் சாதாரண ஹேன்ட்வாஷ் மூலம் கைகளை சுத்தம் செய்தால் கூட போதும் என விளம்பரப்படுத்தப்படுகின்றன. இதனால் தற்போது ஹேன்ட்வாஷ்களின் விலையும் தாறுமாறாக ஏறிவருகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் ஊரடங்கு காரணமாக அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கனிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் விலையோ தாறுமாறாக ஏறிவிட்டது. விவசாயிகளோ தாங்கள் எப்போதும் போல விளைவித்து, எப்போதும் அளிக்கும் விலைக்கே அளிப்பதாகவும், ஆனால் இடைத்தரகர்கள் மூலமே விலையேறி விட்டதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அனைத்துத் தரப்பு மக்களும் தங்கள் பக்க நியாயத்தை எடுத்துரைக்கும்போது, விவசாயிகளின் விலைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும். அதே நேரத்தில் நுகர்வோரான மக்களுக்கும் நியாயமான அதே விலையில் அப்பொருள்கள் கிடைக்கவேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது 'ரூரல் பேஸ்கட்' 'Rural Basket'
இதுகுறித்து RuralBasket இன் இணை நிறுவனரான ஐசக் தேவராஜ் நம்மிடம் தெரிவித்ததாவது, எனது சொந்த ஊர் திருநெல்வேலி, ஆனால் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். 22 ஆண்டுகளாக காப்பீட்டுத் துறை மற்றும் மென்பொருள் துறையில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிந்துவிட்டு, தற்போது இத்துறையில் நுழைந்துள்ளேன். விவசாயியின் விலைபொருள் நேரடியாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த வெப்சைட்டைத் தொடங்கினோம் என்கிறார்.
“ஓர் விவசாயி விற்பனை செய்யும் 1 கிலோ உளுந்து, ரூ.80-க்கு அவரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் அது மக்கள் கைகளில் கிடைக்கும்போது ரூ.140 அல்லது 150-க்கு விற்கப்படுகிறது. இடையில் இருக்கும் பணம் எங்கே போகிறது. இடைத்தரகர்கள் விவசாயிகளின் உழைப்பையும், மக்களின் பணத்தையும் சுரண்டுகின்றனர்," என்றார்.
இதைத் தடுக்க நானும், என் நண்பர் பழனி ராஜனும் ஓர் முடிவெடுத்தோம். விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து, அதனை அப்படியே பொதுமக்களிடம் சேர்க்கவேண்டும். இதற்காக தொடங்கப்பட்டதுதான் இந்த RuralBasket இ-காமர்ஸ் தளம்.
இதன்மூலம் விவசாயிகளிடம் இருந்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படாத, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களை மொத்தமாக கொள்முதல் செய்து, எங்கள் RuralBasket மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கும் மிகக் குறைந்த பேக்கிங் மற்றும் போக்குவரத்து கட்டணம் மட்டும் வசூலித்து அவர்களின் வீடுகளுக்கே நல்ல தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறோம் என்கிறார்.
இவர்களின் RuralBasket மூலம் விவசாயியிடம் இருந்து சந்தை விலைக்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், கிட்டத்தட்ட அதே சந்தை விலைக்கே நுகர்வோருக்கும் கிடைக்கிறது என்பதே இதன் சிறப்பம்சம்.
இவர்களிடம் பாரம்பரிய அரிசி வகைகள், பருப்பு வகைகள், தூய மரச்செக்கு எண்ணெய் வகைகள், மசாலாப் பொருள்கள், சிறுதானிய வகைகள், பீட்ரூட் பவுடர், முருங்கா பவுடர் என சுமார் 220 வகையான பொருட்களை இவர்கள் RuralBasket மூலம் மக்களுக்கு சந்தை விலைக்கே விற்பனை செய்து வருகின்றனர். இந்த தளம் மூலம் வியாபாரம் தொடங்கப்பட்டு 7 மாதங்களே ஆன நிலையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்று, வெற்றிகரமாக அவர்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.
மேலும், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்களுக்கு தரமான பொருட்களைக் கொண்டு சேர்த்து அவர்களின் நலனில் முக்கியப் பங்காற்றி வருவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். இதில் பெரிய அளவில் லாப நோக்கை எதிர்பார்த்து நாங்கள் செயல்படவில்லை. மக்களுக்கு சுத்தமான உணவுப் பொருட்கள் கிடைக்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள், என்றார் ஐசக்.
அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எங்களின் பங்களிப்பாக முற்றிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களையும், நொச்சி, அருகம்புல், மஞ்சள், வேம்பு போன்ற பல்வேறு இயற்கைக் கிருமி நாசினிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹேன்ட்வாஷையும் தற்போது அறிமுகப்படுத்தி, மிகக் குறைந்த விலையில் வழங்கி வருகிறோம்.
எங்களிடம் ஆர்டர் செய்பவர்களுக்கு கொரியர் மூலம் வீட்டுக்கு பொருள்களை வழங்குகிறோம். சந்தையில் கிடைக்கும் மற்ற முகக் கவசம், ஹேன்ட்வாஷை விட எங்களின் தயாரிப்புகள் விலை குறைவாகவும், தரமாகவும் இருப்பதால் மக்கள் மிகவும் விரும்பி வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர் என்கிறார் ஐசக் தேவராஜ்.
தமிழகம் மட்டுமன்றி, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கும் பொருள்களை வழங்கும் RuralBasket. இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் பொருள்களை மக்கள் பயன்படுத்தவேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தங்களின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கிறது.
இன்னும் பத்தே ஆண்டுகளில் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை பொற்காலமாக மாற்றுவதும், பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தாத, இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்கி நாட்டை முன்னேற்றுவதே RuralBasket ன் லட்சியம் என்கிறார் இவர்.
மேலும் இதுகுறித்து விவரங்களை அறிந்துகொள்ள பின்வரும் இணைப்புகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம். வலைதளாம்: https://www.ruralbasket.com Facebook: https://www.facebook.com/ruralbasket/
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் இந்த கொரோனா தொற்றுநோய் மட்டுமல்ல. எதிர்காலத்தில் எந்த ஓர் நோய் பயமும் இன்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது RuralBasket. ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க நாமும் இவர்களோடு கைகோர்ப்போம் வாருங்கள்.