Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ஸ்டேட் வங்கி ATM-ல் பணம் எடுக்க இனி புதிய நெறிமுறைகள்!

ஏடிஎம் பரிவர்த்தனை சார்ந்த மோசடிகளை தடுக்க, கூடுதல் பாதுகாப்பிற்காக இந்த புதிய விதிமுறையை ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அது என்ன தெரியுமா?

ஸ்டேட் வங்கி ATM-ல் பணம் எடுக்க இனி புதிய நெறிமுறைகள்!

Wednesday January 08, 2020 , 1 min Read

ஏடிஎம் பரிவர்த்தனை சார்ந்த மோசடிகள் அதிகரித்து வருவதை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பணம் எடுக்க ஒரு முறை பாஸ்வேர்டு (ஓ.டி.பி) முறையை அறிமுகம் செய்துள்ளது.


ஸ்டேட் வங்கியின், ஓ.டி.பி மூலம் பணம் எடுக்கும் முறை இந்த ஆண்டு துவக்கம் முதல் அமலுக்கு வந்துள்ளது. ஸ்டேட் வங்கி இந்த புதிய முறை குறித்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

SBI Atm
இந்த முறை ரூ.10,000 க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை இந்த முறை பொருந்தும்.

ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள், இனி இரவு 8 மணிக்கு மேல் ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பணம் எடுக்க வேண்டும் எனில், கையில் மறக்காமல் செல்போன் வைத்திருக்க வேண்டும்.

வங்கியில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு வரும் ஒரு முறை பாஸ்வேர்டை சமர்பித்து, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்.

இந்த புதிய முறைப்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் எடுக்க விரும்பும் தொகையை குறிப்பிட்டவுடன், ஏடிஎம் இயந்திர திரையில், ஓடிபி செய்தி தோன்றும். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் தங்கள் போனுக்கு வந்துள்ள பாஸ்வேர்டை திரையில் சமர்பிக்க வேண்டும். அதன் பிறகே பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

எனினும், ஸ்டேட் வங்கி அல்லாத பிற வங்கி ஏடிஎம்கள் மூலம் பணம் எடுக்க இந்த முறை பொருந்தாது. மேலும் பல வங்கிகள் இந்த முறையை பின்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது பெரும்பாலான வங்கிகள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கப்பட்டவுடன் வாடிக்கையாளர் போனுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்புகிறது. எனினும், ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ள ஒரு முறை பாஸ்வேர்டு சமர்பித்து பணம் எடுப்பது ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதை மேலும் பாதுகாப்பு மிக்கதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொகுப்பு: சைபர்சிம்மன்