‘அன்பான வாடிக்கையாளர்களே’ - இனி Zomato-வில் நீங்க தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் ஆர்டர் செய்யலாம்!
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜோமேட்டோ இப்போது தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் போலவே இந்தியிலும் சேவையை தொடங்கியுள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான
இப்போது தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் போலவே இந்தியிலும் சேவையை தொடங்கியுள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களை பயன்படுத்துவது என்று வரும் போது இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மொழி பற்றிய கேள்வியும் ஒன்றாகும். இதனை தவிர்ப்பதற்காக தான், இதியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஜோமேட்டோவின் ஆப் இப்போது இந்தி, தமிழ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, மராத்தி, மற்றும் தெலுங்கு போன்ற சில பிராந்திய மொழிகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் ஆங்கிலம் பொதுவான மொழியாக இருந்தாலும், பிராந்திய மொழிகள் மூலமாக மட்டும் ஜோமேட்டா நிறுவனத்திற்கு 1,50,000 ஆர்டர்களுக்கு மேல் கிடைப்பதாகவும், குறிப்பாக இந்தி மூலமாக 54 சதவீத ஆர்டர்களும், தமிழ் மூலமாக 11 சதவீத ஆர்டர்களும் கிடைப்பதாக நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"உங்களுடைய நேர்மறையான உணர்வுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருந்ததை உணரும் இந்த தருணத்தில், நாங்கள் முக்கியமான ஒன்றை தொடங்க உள்ளோம். எங்கள் பிராந்திய பயன்பாடுகளின் தரத்தை மேலும் துல்லியமாகவும் சூழலுக்கு ஏற்ப மேம்படுத்துவதிலும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் ஜோமேட்டோ நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று உயர்மட்ட நிர்வாகிகள் வெளியேறியது இந்நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இணை நிறுவனர் மோஹித் குப்தா சமீபத்தில் வெளியேறினார். அவருக்கு முன், நியூ இனிசியேட்டிவ் துறையின் பதலைவரான ராகுல் கஞ்சூ ராஜினாமா செய்திருந்தார். அதற்கு ஒரு வாரம் முன்னதாக தான், நிறுவனத்தின் இன்டர்-ஸ்டேட் டெலிவரி சேவையான இன்டர்சிட்டி லெஜண்ட்ஸின் தலைவரான சித்தார்த் ஜாவர் ராஜினாமா செய்திருந்தார்.
இருப்பினும், ஆன்லைன் உணவு விநியோக தளத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு செப்டம்பர் காலாண்டில் ரூ.251 கோடியாகக் குறைந்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.430 கோடியாக இருந்தது.
வருவாய் முந்தைய ஆண்டில் ரூ.1,024 கோடியிலிருந்து ரூ.1,661 கோடியாக உயர்ந்துள்ளது, இது குறிப்பிடத்தக்க 62.2 சதவீதம் உயர்ந்துள்ளது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.