ஐபிஓ மூலம் ரூ.5,500 கோடி உயர்த்த ஓலா எலெக்ட்ரிக் திட்டம் - பொதுப்பங்கு வெளியீட்டிற்கு செபி அனுமதி!
திட்டமிட்டபடி பங்கு வெளியீடு நடைபெற்றால் பங்குச் சந்தைக்குள் பட்டியலிடப்படும் முதல் மின்சார வாகன நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் இருக்கும்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் முதல் பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (ஐபிஓ) சந்தைக் கட்டுப்பாட்டாளரான பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) அனுமதியைப் பெற்றுள்ளது.
மின்சார வாகன நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால். இந்த முதல் பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.5,500 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் பங்கு வெளியீட்டிற்குத் தேவையான "Red-herring prospectus" என்ற ஆவணத்தை செபியிடம் ஓலா எலெக்ட்ரிக் டிசம்பர் 2023-அன்று சமர்ப்பித்தது. திட்டமிட்டபடி பங்கு வெளியீடு நடைபெற்றால் பங்குச் சந்தைக்குள் பட்டியலிடப்படும் முதல் மின்சார வாகன நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் இருக்கும்.
இதற்கிடையில், நிறுவனம் ஆல்டேரியா கேபிட்டலிடம் இருந்து ரூ.100 கோடி கடன் நிதி பெற்றுள்ளது என்று நிறுவனத்தின் பதிவாளர் தாக்கல் செய்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் ஓலா எலெக்ட்ரிக் பெறும் இரண்டாவது கடன் நிதியாகும்.
இந்த ஆண்டு பங்குச் சந்தைகளுக்குள் நுழைந்த Go
, , மற்றும் போன்ற நிறுவனங்களுடன் ஓலா எலெக்ட்ரிக்கும் இணைகிறது, மேலும், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட விரும்பும் அதிக எண்ணிக்கையிலான இந்திய ஸ்டார்ட்அப்களுக்கான ஜன்னலையும் இந்த முதல் பங்கு வெளியீட்டு வாய்ப்பு திறந்துள்ளது.பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை தன் உற்பத்தி ஆலையை விரிவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கடன் திருப்பி அளித்தல், மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதாக ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. இந்தியா, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவில் R&D நடவடிக்கைகளை மேற்கொள்கிறது, புதிய EV தயாரிப்புகள் மற்றும் பேட்டரி பேக்குகள், மோட்டார்கள் மற்றும் வாகன பிரேம்கள் போன்ற முக்கிய மின் வாகன உதிரிபாகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் 2023-ம் ஆண்டு வருவாய் 2,782 கோடி ரூபாய். அதன் இழப்பு ரூ.1,472 கோடியாக இருந்தாலும் ஆண்டு வளர்ச்சி 510%. 2024-இன் முதல் காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,272 கோடியாகவும், ரூ.267 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.