Msme-களை பாதுகாக்க முன்பணம் வழங்க தொழில்துறை நிறுவனங்களை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கேட்டுக் கொண்டார்!
குறு, சிறு மற்றும் நடுகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (த்தர நிறுவனங்களின் (SMEs) நம்பகத்தன்மை மற்றும் வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்க, அவர்களின் சேவைகளுக்கான முன்பணத்தை வழங்க வேண்டும் என தொழில்துறை நிறுவனங்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) நம்பகத்தன்மை மற்றும் வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்க, அவர்களின் சேவைகளுக்கான முன்பணத்தை வழங்க வேண்டும் என தொழில்துறை நிறுவனங்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொழில் சங்கங்களுடன் பியூஸ் கோயல் ஆலோசனை:
நாட்டில் உள்ள உயர்மட்ட வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், தனது ஆலோசனைகளை வழங்கினார்.
பொருளாதார நடவடிக்கைகளுக்கு விரைவாகத் திரும்புவதை உறுதி செய்வதற்காக வணிக சமூகத்திடமிருந்து ஆலோசனைகள் மற்றும் தகவல்களைப் பெறுவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்,
கொரோனா பெருந்தோற்று நேரத்தில் கடும் பாதிப்புகளைச் சந்தித்த ஏற்றுமதி துறையானது தற்போது மீண்டும் முன்னேறி வருவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பயணம் மற்றும் சுற்றுலா மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும், ஏற்றுமதியில் நாட்டின் சாதனைகள் குறித்து விளக்கிய அமைச்சர், நடப்பு ஆண்டில் 250 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஏற்றுமதி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எஃப்டிஏ (FTAs) பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டிய பியூஸ் கோயல், பல ஆரம்ப கட்ட ஒப்பந்தங்களை முடிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்துவிட்டதை சுட்டிக்காட்டிய அவர், ஆஸ்திரேலியாவுடனான பேச்சுவார்த்தை நல்ல நிலையில் இருப்பதாகவும், இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் கூறி தொழில் சங்க பிரதிநிதிகளுக்கு புது உத்வேகத்தை வழங்கினார். கொரியாவுடனான சந்தை மறுபரிசீலனைகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், பியூஸ் கோயல், முந்தைய ஒப்பந்தம் பற்றிய கவலைகளைப் போக்க ஒரு விரிவான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று ஆபத்து இந்தியாவை விட்டு இன்னும் விலகாத நிலையில், சோதனை வசதிகள் மற்றும் ஆய்வகங்களை தரம் உயர்த்துவதற்கு உடனடித் தேவை இருப்பதாகவும், இது தொடர்பாக இந்திய தொழில்துறை தனது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 400 பில்லியன் டாலர்களை தாண்டிய ஏற்றுமதி வளர்ச்சிக்கான வழிகாட்டுதலையும் தொழில் துறையினர் அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மூலதன செலவினங்களுக்காக அரசு எடுத்துள்ள உறுதியான நிலைப்பாட்டை சுட்டிக்காட்டிய அமைச்சர், வணிக நடவடிக்கைகளுக்கு எப்போதும் மத்திய அரசு ஆதரவளிக்கும் எனத் தெரிவித்தார்.
தொழில் துறையினர் தங்களது சிறப்பான வளர்ச்சிக்கு, பிரதமர் கதிசக்தி தேசிய மாஸ்டர் பிளான் மற்றும் இந்தியா இண்டஸ்ட்ரியல் லேண்ட் பேங்க் போன்ற திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் மீண்டும் கோவிட் தொற்று தீவிரமடைந்து வந்தாலும், பெருளாதார நடவடிக்கைகளில் அது பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் மத்திய இணை அமைச்சர் பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.