‘சுயசார்பு இந்தியா ஆப் புத்தாக்க சவால்’ - பிரதமர் அறிவிப்பு!
உலகத்தரம் வாய்ந்த மேட் இன் இந்தியா ஆப்’களை உருவாக்க, தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர்களுக்கு போட்டியை அறிவித்துள்ளார் பிரதமர்.
பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வரும் இந்திய செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த ஆப்’களை உருவாக்கும் வகையில், அவற்றின் ஆற்றலை அளவிடுவதில் கவனம் செலுத்தும் 'சுயசார்பு இந்தியா ஆப் புத்தாக்கச் சவால்' 'Aatmanirbhar Bharat App Innovation Challenge' திட்டத்தை அறிவித்து தொடங்கி வைத்தார்.
“உலகத்தரம் வாய்ந்த மேட் இன் இந்தியா செயலிகளை உருவாக்குவதில், தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் இடையே பெரும் ஊக்கம் தற்போது காணப்படுகிறது. அவர்களது சிந்தனைகளுக்கும், பொருள்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், @GoI_MeitY and @AIMtoInnovate ஆகியவை சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கியுள்ளது.
உங்களிடம் இது போன்ற செயல்படுத்தும் ஐடியா இருந்தாலோ அல்லது இதுபோன்ற ஆப்’களை உருவாக்கும் தொலைநோக்கும், வல்லமையும் உங்களிடம் இருப்பதாகக் கருதினாலோ, இது உங்களுக்கான சவாலாகும். தொழில்நுட்பச் சமுதாயத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன், என்று பிரதமர் கூறினார்.
'Aatmanirbhar Bharat App Innovation Challenge' போட்டியில் பங்குபெற்று வெற்றி பெரும் ஆப் டெவலப்பர்களுக்கு பரிசுகளும், அரசுக்குத் தேவையான சேவைகளுக்கு பங்கு அளிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு அறிவித்த 59 சீன ஆப்’களுக்கான தடை, இந்திய டிஜிட்டல் சூழலையும், உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊக்கமாக அமையும் என்றும் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்’கள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். பிரதமர் மோடியின் ‘ஆத்மநிர்பர்’ அதாவது சுயசார்பு இந்தியா கனவுக்கு இது வழி செய்வதாக இருக்கும் என்று கருதுகின்றனர்.
'சுயசார்பு இந்தியா புத்தாக்கச் சவால்' கலந்து கொள்ள: innovate.mygov.in