கோவிட்-19க்கு எதிராகப் போராடும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு!
தேசிய தொழில்நுட்ப தினத்தில், எந்த ஒரு சவாலான சூழலிலும், நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் புதுமையாளர்கள் சூழலுக்கு ஏற்ப செயல்பட்டிருப்பதகாவும், கடந்த ஆண்டு முதல் கோவிட்-19 க்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
1998 ல் ராஜஸ்தானின் பொக்ரானில் அணு குண்டு சோதனை நடத்தப்பட்ட தினம், தேசிய தொழில்நுட்பத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் தான், பொக்ரான் சோதனையில் இந்தியா ஷக்தி-1 ஏவுகனையை வெற்றிகரமான சோதனை செய்தது. முன்னாள் குடியரசுத்தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.
பொக்ரான் திட்டம், இந்திய ராணுவத்தால், பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி கழகம், பாபா அணு ஆய்வு மையம் மற்றும் கண்டறிதல் மற்றும் ஆய்வுக்கான அணு தாதுக்கள் இயக்குனரகம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியா மேலும் சில அணு குண்டு சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன் பயனாக அப்போதைய பிரதமர் வாஜ்பாயி இந்தியாவை அணு ஆயுத திறன் கொண்ட தேசமாக அறிவித்தார். இந்தியா அணு ஆயுத ஆற்றல் கொண்ட நாடுகள் பட்டியலில் இணைந்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் இந்த தினம் அமைகிறது.
"தேசிய தொழில்நுட்ப தினத்தில், நம்முடைய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப ஈடுபாடு கொண்டவர்களின் கடின உழைப்பு மற்றும் திறனுக்கு தலை வணங்குகிறோம்,” என பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆற்றலை எடுத்துக்காட்டிய 1998 பொக்ரான் சோதனையை நாம் பெருமையுடன் நினைவு கூறுகிறோம்,” என பிரதமர் கூறியுள்ளார்.
”எந்த சவாலான சூழலிலும், நம்முடைய விஞ்ஞானிகள் மற்றும் புதுமையாளர்கள் சூழலுக்கு ஏற்ப செயல்பட்டு சவாலை எதிர்கொண்டிருக்கின்றனர்,” என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒராண்டாக, இவர்கள், கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள போராடி வருகின்றனர். அவர்கள் உழைப்பு மற்றும் ஈடுபாட்டை பாராட்டுகிறேன்.”
இந்த தினத்தில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஹன்சா-2 விமானத்தையும் இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.