இணையத்தை தெறிக்கவிட்ட இளவரசர் ஹாரி-மேகன் மெர்க்கலின் முதல் வாரிசு அறிவிப்பு!
ப்ரிட்டன் அரசக்குடும்பத்தில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுமே செய்தி தான். அதிலும் குறிப்பாக வாரிசு அறிவிப்புகள். ஒவ்வொருமுறையும் மீடியாவும், மக்களும் அதில் சில சர்ச்சைகளை கிளப்புவதும் வழக்கமாகிவிட்டதே...
இந்த வாரம் முழுவது பிரட்டன் செய்தி சானல்களின் டிஆர்பி எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது, இதற்கு முக்கியக் காரணம் அரசக் குடும்பத்தோடு இணையும் மற்றுமொரு குட்டி இளவரசர். பிரிட்டன் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த சசெக்ஸ் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் மெர்க்கல் தங்களது முதல் ஆண் குழந்தையை மே 6ம் தேதி உலகிற்கு கொண்டுவந்தனர். இளவரசர் பிலிப்சின் எட்டாவது பேரனான இக்குழந்தை அரசவை வரிசையில் 7 ஆம் இடத்தில் உள்ளது.
அரசவை குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர்கள் மக்களுக்கு தங்கள் குழந்தையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் டச்சஸ்களே (இளவரசி) குழந்தையை ஏந்தி மக்கள் முன் அறிமுகப்படுத்துவார்கள். ஆனால் ஹாரி மற்றும் மேகன் தம்பதியனர் தங்கள் திருமண வரவேற்பு நடந்த புனித ஜார்ஜ் ஹாலில் தங்கள் குழந்தையை அறிமுகப்படுத்தியபோது இளவரசர் ஹாரியே குழந்தையை கையில் ஏந்தியவாறு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்.
மேகன் ஏன் மற்ற இளவரசிகள் போல் குழந்தையை கையில் வைத்துக்கொள்ளவில்லை என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு,
“திட்டமிட்டக் காரணம் எதுவும் இல்லை, பிரசவம் நடந்து இரு தினங்களே ஆகிறது, மேலும் அவர் ஹீல்ஸ் அணிதிருந்ததே காரணம்,” என ராயல் குடும்பத்தின் பேச்சாளர் மெலன் ப்ரோம்லே தெரிவித்தார்.
திருமணமாகி ஓராண்டு கூட நிறைவேறாத இந்த இளம் தம்பதியனர் பெரும்பாலும் சில அரசவைக் கட்டுப்பாடுகளை மீறி சாதாரண ஜோடிகள் போல நடப்பது வழக்கமாகி விட்டது. இதை உறுதி செய்யும் விதம் மெலன் ப்ரோம்லே,
“மேகன் மற்றும் ஹாரி மற்ற தம்பதியனர்களை விட மாறுப்பட்டவர்கள், அவர்கள் எந்த விதியையும் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஹாரியின் அண்ணன் குழந்தையை ஏந்தாமல் கேட் குழந்தையை ஏந்தியதும் அவர்கள் விருப்பம் தான் என தெரிவித்தார்.”
எதையும் வித்யாசமாக செய்யும் இவர்கள் வழக்கம்போல் மருத்துவமனையில் இருந்து தங்கள் குழந்தையை அறிமுகப்படுத்தாமல் தங்கள் திருமணம் வரவேற்பு நடந்த வின்ஸ்டர் கேசிலில் அறிமுகப்படுத்தினர்.
சசெக்ஸ் இளவரசர் மற்றும் டச்சஸின் குழந்தை விவரம்:
மே 6, 2019 காலை 5.26 மணி அளவில் லண்டன் மருத்துவமனையில் பிறந்த தங்கள் குழந்தைக்கு ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன் வின்ச்டர் என பெயர் சூட்டியுள்ளனர். 3.26 கிலோ எடையில் திங்கள் அன்று பிறந்த ஆர்ச்சி ஆரிசன், புதன்கிழமை அன்றே மக்களுக்கு அறிமுகப்படுத்தபட்டார்.
அறிமுக நிகழ்வின் போது இளவரசர் கையில் இருந்த ஆர்ச்சி 109 பவுண்ட் விலை கொண்ட அதாவது 10000 ரூபாய் மதிப்பிலான டவலில் சுற்றப்பட்டு 6000 ரூபாய் மதிப்பிலான தொப்பியை அணிந்திருந்தார். அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் இடம் பேசிய அரசு தம்பதியனர் தங்கள் குழந்தைப்பற்றிய விவரங்களுக்கு பதிலளித்தனர்.
“இது கனவு போன்று இருக்கிறது, இந்த இரு நாட்கள் என் வாழ்வின் சிறந்த நாட்கள்,” என இளவரசி மேகன் தெரிவித்தார்.
குழந்தையின் தோற்றம் பற்றி கேட்ட பொழுது இளவரசர் ஹாரி,
“குழந்தையின் தோற்றம் இரண்டு வாரத்திற்குள் நிறைய மாறும் என தெரிவிக்கின்றனர், யாரை போல் இருக்கிறார் என்பதை ஒரு மாதம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தினமும் வெவ்வேறு தோற்றத்தில் தென்படுகின்றான்,” என்றார்.
ஹாரியின் அண்ணன் கேம்ப்ரிட்ஜ் இளவரசர் வில்லியம் மற்றும் டச்சஸ் கேட்டின் 3 குழந்தைகள், பிரின்சஸ் ஜார்க், பிரின்சஸ் சார்லட், பிரின்ஸ் லூயிஸை தொடர்ந்து ஹாரியின் வாரிசான ஆர்ச்சி நான்காவது இளவரசராக இருக்கிறார் அதாவது இளவரசர் சார்லசின் 4 வது பேரன்.
இளவரசர் ஆர்ச்சியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் பிரிட்டன் மக்கள்.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்