Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மலிவான கட்டணத்தில் தரமான மருத்துவம் சென்னையில் தொடக்கம்!

தமிழகத்திலேயே முதன் முறையாக தனியார் மருத்துவமனை சார்பில் மிகக்குறைந்த கட்டணத்திலான தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மலிவான கட்டணத்தில் தரமான மருத்துவம் சென்னையில் தொடக்கம்!

Wednesday October 05, 2022 , 3 min Read

தமிழகத்திலேயே முதன் முறையாக தனியார் மருத்துவமனை சார்பில் மிகக்குறைந்த கட்டணத்திலான தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

’சோல்ஃபுல் இன்னோவேட்டிவ் கேர் பிரைவேட் லிமிடெட்’, தமிழகத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்புத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக ‘RMD Care' ஆர்எம்டி கேரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம் நோய்த்தடுப்பு சிகிச்சை, நினைவாற்றல் பராமரிப்பு, கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு, வாழ்க்கை உதவி மற்றும் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு ஆகிய குறிப்பிட்ட பகுதிகளில் மலிவான மற்றும் தரமான சேவையை அளிப்பதே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

RMD Care

முதியோர், மாற்றுத்திறனாளிகள் நலம்:

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 13.50% பேர் முதியோர் பிரிவில் உள்ளனர். கேரளாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான முதியோர்களைக் கொண்ட இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்த மக்கள்தொகையில் கணிசமான சதவீதத்தினர் பெரும் சுகாதாரத் தேவைகளைக் கொண்டுள்ளனர்.

பொது சுகாதாரத்தின் தமிழ்நாடு மாதிரியானது கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் தரமான சுகாதார சேவைகளை வழங்குவதில் அதன் வெற்றிக்காக புகழ்பெற்றது.

1939ல் பொது சுகாதாரச் சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். 2050 வாக்கில், இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட 340 மில்லியன் மக்கள், அதன் மக்கள்தொகையில் 20% க்கு அருகில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகையை விட அதிகமாகும்.

ஒவ்வொரு 1000 நோயாளிகளுக்கும் ஒரு படுக்கை என்ற குறைந்த ஊடுருவல் இருப்பதால், இந்தியாவில் ஏற்கனவே அதிக முதலீடு மற்றும் வள ஒதுக்கீடு தேவைப்படுகிறது. மேலும், வளர்ந்து வரும் முதியோர் மக்கள்தொகைக்கு, சவால்கள் மிகப்பெரியவையாக உள்ளது.

இந்நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான பராமரிப்பு மற்றும் சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்காக தமிழகத்தில் ’ஆர்எம்டி’ மூலம் மலிவான விலையில் தரமான சிகிச்சை வழங்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்எம்டி கேர் அறிமுகம்:

சென்னையில் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதி டாக்டர். பி. ஜோதிமணி, எம்.எல்.ஏ. கருணாநிதி, கலைமாமணி PMFJ Ln. டாக்டர் ஜி. மணிலால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

RMD Care

இந்நிகழ்ச்சியில், RMD கேர் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் ரிபப்ளிகா ஸ்ரீதர் பேசுகையில்,

“இந்த முயற்சியின் மூலம் மிக முக்கியமான தேவையை நிவர்த்தி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் மக்களுக்குத் தேவையான அளவிலான மருத்துவமனை படுக்கைகள் குறைவாக உள்ளன. 2030 ஆம் ஆண்டுக்குள், 1000 நபர்களுக்கு 3.2 படுக்கைகள் என்ற தற்போதைய உலகளாவிய சராசரியை எட்டுவதற்கு இந்தியாவிற்கு 2.9 மில்லியன் கூடுதல் படுக்கைகள் தேவைப்படும். இந்த தேவையில் பெரியவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவாக இருப்பார்கள். தவிர மாற்றுத்திறனாளிகளும் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். தரமான மற்றும் மலிவு விலையில் இருக்கும் பராமரிப்பை அவர்கள் அணுகுவது முக்கியம,” எனத் தெரிவித்துள்ளார்.

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நோய்த்தடுப்பு சிகிச்சை, புற்றுநோய் பராமரிப்பு, நினைவாற்றல் பராமரிப்பு, தீவிர சிகிச்சை மற்றும் உதவி வாழ்க்கை ஆகியவற்றின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதனை பூர்த்தி செய்ய ஆர்எம்டி கேர் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RMD Care

கடந்த 20 ஆண்டுகளாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பில் முக்கியப் பங்காற்றி வரும் ஆர்எம்டி கேர்,

தமிழகத்தில் இந்த சேவைகளை, அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. புதிய பராமரிப்பு சேவைகள் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர்.ரிபப்ளிகா ஸ்ரீதர், ஸ்ருதி ஸ்ரீதர், இம்மானுவேல், ஸ்ரீகுமார் மற்றும் விஷால் ஆகியோருடன் RMD இன் மருத்துவக் குழுவுடன் ஒருங்கிணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்எம்டி கேர் பற்றி:

RMD Care 1994 ஆம் ஆண்டு முதல் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் பொதுப் பிரிவினருக்கு மலிவு மற்றும் அணுகக்கூடிய ஆரோக்கியத்தை வழங்குவதில் முன்னோடியாக இருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக 90 ஆயிரத்திற்கும் அதிகமான முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான மருத்துவம் மற்றும் ஆதரவு தரக்கூடிய மருத்துவமனையாக ஆர்எம்டி செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீபெரும்பதூரில் உள்ள சிறப்பு மருத்துவமனை, திறமையான செவிலியர், பல்வேறு பராமரிப்பு மேலாண்மை தொகுதிகளில் நிபுணத்துவம் ஆகியவை பராமரிப்புத்துறையில் ஆஎம்டி கேரை முன்னோடியாக மாற்றியுள்ளது.