வங்கிக் கடன் வாங்கியோர் கவனத்திற்கு; ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்வு!
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவீதமாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா உயர்ந்தியுள்ளது.
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவீதமாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா உயர்ந்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உலகப் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது. அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க ஃபெடரல் வங்கி 4வது முறையாக வட்டி விகிதத்தை 75 புள்ளிகள் உயர்த்தியது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது, பிற நாட்டு நாணயங்களின் மதிப்பில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
தற்போது அமெரிக்க வேலை வாய்ப்புத் தரவு சாதகமாக இருப்பதால், டிசம்பர் மாதத்திற்கான வட்டி விகிதம் குறைவான அளவிலேயே உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிகரித்து ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் 0.35 சதவீதம் அளவிற்கு உயர்த்தியுள்ளது.
இன்று மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி, ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் தற்போது வரை வட்டி விகிதம் 2.25% உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகித உயர்வால் வீடு, கார், தனி நபர் கடனுக்கான தவணைத்தொகை மற்றும் தவணைக்காலம் அதிகரிக்க உள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் மட்டும் மே மாதம் 4.40 சதவீதம், ஜூன் மாதத்தில் 4.90 சதவீதம், ஆகஸ்ட் மாதத்தில் 5.40 சதவீதம், செப்டம்பர் மாதத்தில் 0.5 சதவீதமும் என 4 முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Gold Rate Chennai: நேத்தே தங்கம் வாங்கி இருக்கலாம் - இன்றைய விலை என்ன தெரியுமா?