ஒரு மாதத்திற்கு 100க்கும் மேற்பட்ட பாம்புகள் மீட்பு: உத்தரகண்ட்டின் 'பாம்பு மனிதன்' முக்தர் அலி!
பாம்புகளை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் மனிதர்!
மனிதர்களின் ஆக்கிரமிப்புக் காரணமாக வன விலங்குகள் உட்பட பல்வேறு உயிரினங்களின் வாழ்விடங்கள் பறிபோகின்றன. இந்த ஆக்கிரமிப்புக்கு முக்கியக் காரணம், மனிதனின் இடம் மற்றும் வளங்களின் நுகர்வு அதிகரிப்பு தான். பல ஆண்டுகளாக, மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதன் விளைவாக மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன.
இதில் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பாம்புகள். பாம்புகள் தங்களின் வாழ்விட இழப்பு பறிபோவதன் விளைவாக, பெரும்பாலும் மனிதர்கள் வசிக்கும் எல்லைக்குள் நுழைந்துவிடுகிறது. இதுபோன்று நுழையும் வனவிலங்கு மற்றும் பாம்புகளை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முக்தர் அலி.
உத்தரகண்ட் மாநிலத்தின் 'பாம்பு மனிதன்' என்று பிரபலமாக அழைக்கப்படும் முக்தர் அலி, தனது கிராமத்தில் மனிதர்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பாம்புகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தின் கேலா கெரா பகுதியில் வசித்து வரும் இவர் ஓவியர். என்றாலும், இவர் பாம்புகளை பிடிக்கும் தொழிலில் ஈடுபட தொடங்கியது ஒரு நண்பர் மூலமாகதான்.
ஆரம்பத்தில் பொழுதுபோக்காக தொடங்கிய இது தற்போது தொழிலாகவே மாறிவிட்டது. தனது தொழில் தொடர்பாக பேசும் அலி,
“கிராமங்களுக்குள் நுழையும் பாம்புகளை காப்பாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறேன். பெரும்பாலும் மனிதர்களால் பாம்புகளால் அடித்து கொல்லப்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பாம்புக்கு தீங்கு விளைவிப்பதற்கு பதிலாக என்னை கிராம மக்கள் அழைக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன்.”
அப்படி செய்யும்போது பாம்பைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பாதுகாப்பான இடத்திற்கு மறுவாழ்வு அளிக்க முடியும். நான் ஒரு மாதத்திற்கு 100க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்கிறேன். கடந்த ஆண்டு, குறைந்தது 1,000 பாம்புகளை மீட்டிருப்பேன். கடந்த மலைக்காலத்தில் எனது எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பாம்புகளை பாதுகாக்க இறங்கிவிட்டேன். கோப்ரா, மலைப்பாம்புகள் போன்ற பாம்பு வகைகளை மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளேன், எனக் கூறுகிறார்.
தனது நண்பர் மூலமாக தான் பாம்புகளை மீட்பதில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் முக்தர் அலி. ஆனால், இதனால் பலமுறை ஊதியம் பெறுவதில் சிக்கல்களை சந்தித்துள்ளார். என்றாலும் பாம்புகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் உன்னத பணியில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். காரணம், அவரை இந்தத் தொழிலில் ஆர்வம் காட்ட வைத்த நண்பர் அவருக்குத் தேவையான நிதி உதவி அளிக்கத் தொடங்கவே தொடர்ந்து இந்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் அலி.
கட்டுரை: Think Change India | தமிழில்: மலையரசு