Rupee vs Dollar: தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு; பின்விளைவுகள் என்னென்ன?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவாக 81.47ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவாக 81.47ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த வெள்ளியன்று, டாலருக்கு எதிராக ரூபாயின் 13 காசுகள் குறைந்து 80.99 ஆக முடிந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் வரை சரிந்து 81.47 வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததுள்ளது.
தொடர் சரிவில் இந்திய ரூபாய்:
கடந்த வாரம் புதன்கிழமை அமெரிக்காவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 75 புள்ளிகள் அதிகரித்தது. நான்காவது முறையாக வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதால், அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகளின் பணத்தின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 81.47 என்ற அளவுக்கு சரிவதால், கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் இறக்குமதி விலை உயர்ந்து பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கூடிய அபாயம் உள்ளது. மேலும், இந்திய ரூபாயின் சரிவானது, கடந்த பல மாதங்களாக ரிசர்வ் வங்கியின் மேல் சகிப்புத்தன்மை அளவான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.
எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்ய 85 சதவீதமும், எரிவாயு தேவைக்காக 50 சதவீதமும் இறக்குமதியை சார்ந்துள்ளதால், ரூபாய் மதிப்பு குறைவது உள்நாட்டு எரிபொருளின் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசலின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் சில்லறை வணிக பணவீக்கம், காய்கறி விலை உயர்வு, கடன் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எஸ்பிஐ அறிக்கையின்படி,
எந்த ஒரு மத்திய வங்கியாலும் தற்போது பணமதிப்பு சரிவைத் தடுக்க முடியாது. எனவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரூபாயின் மதிப்பு குறைய ரிசர்வ் வங்கி அனுமதிக்கலாம். உக்ரைன் போருக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி சொத்துக்கள் 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளன. அதேசமயம், இந்திய ரிசர்வ் வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை அதிகரித்தால் இந்திய நாணயத்தின் மதிப்பு வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதை சரிய செய்ய மத்திய ரிசர்வ் வங்கி, வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்கான கொள்கை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த வார இறுதியில் ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணயக் கொள்கையை அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ரெப்போ விகிதம் அல்லது குறுகிய கால கடன் விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாணயக் கொள்கைக் குழுவின் 38வது கூட்டம் செப்டம்பர் 28-30 தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.