இந்த வாரத்தில் 2ம் முறை: ரூ.100 கோடி மதிப்புள்ள இன்போசிஸ் பங்குகளை வாங்கிய S.D.ஷிபுலால்!
மனைவியிடம் இருந்து பங்குகளை கைப்பற்றினார்!
இன்போசிஸ் இணை நிறுவனர் S.D.ஷிபுலால் மீண்டும் ரூ.100 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருக்கிறார். வியாழக்கிழமை நிறுவனத்தின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திறந்த சந்தை பரிவர்த்தனை மூலம் வாங்கினார்.
ஷிபுலால் ஒரு பங்குக்கு சராசரியாக ரூ.1,384 விலையில் 7.22 லட்சத்திற்கும் அதிகமான பங்குகளை வாங்கியதாக பங்குசந்தை குறியீட்டு எண் பிஎஸ்இ தொகுதி ஒப்பந்த தரவு காட்டுகிறது.
இந்த பங்குகள் அனைத்தையும் தனது மனைவியிடம் இருந்தே ஷிபுலால் வாங்கியிருக்கிறார். இவர் இப்படி வாங்குவது இது முதல்முறையல்ல. இத்தாவரத்தில் மட்டும் இது இரண்டாம் முறையாகும். இந்த மாதத்தில் கணக்கிடும்போது இது மூன்றாவது முறையாகும்.
முன்னதாக, மார்ச் 2021 காலாண்டில் பங்குதாரர்களின் தரவுகளின்படி, ஐடி மேஜரின் விளம்பரதாரர்களான ஷிபுலால் மற்றும் குமாரி முறையே 0.05 சதவீத பங்குகளையும், நிறுவனத்தில் 0.21 சதவீத பங்குகளையும் வைத்திருந்தனர். இந்தநிலையில் தான், மே மாதத்தில் இதுவரை எஸ் டி ஷிபுலால் நிறுவனத்தின் பங்குகளை மே 12 அன்று ரூ.100 கோடிக்கும், மே 19 அன்று ரூ.100 கோடிக்கும், மே 24 அன்று ரூ.100 கோடிக்கும் திறந்த சந்தை ஒப்பந்தங்கள் மூலம் வாங்கியிருக்கிறார்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது மனைவியான குமாரியிடம் இருந்தே ஷிபுலால் பங்குகளை பெற்றுள்ளார். வியாழக்கிழமை இன்போசிஸின் பங்குகள் விலை 0.52 சதவீதம் அதிகரித்து ரூ.1,404.65 ஆக முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஒரு ஒழுங்குமுறை தாக்கலில்,
“2021 மே 27 அன்று பங்குச் சந்தையின் தொகுதி விற்பனை மூலம் குமாரி ஷிபுலாலிடமிருந்து 7,22,545 ஈக்விட்டி (0.02 சதவீதத்தைக் குறிக்கும்) இன்போசிஸ் பங்குகளை வாங்குவது குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்," என்று கூறியிருந்தார். இந்த பரிவர்த்தனைக்குப் பிறகு, இன்ஃபோசிஸில் எஸ் டி ஷிபுலாலின் பங்கு 0.12 சதவீதமாக உயர்ந்துள்ளது, குமாரி ஷிபுலாலின் பங்கு 0.14 சதவீதமாக உள்ளது.
இன்போசிஸ் இணை நிறுவனரான S.D.ஷிபுலால் தனது ஒட்டுமொத்த முதலீட்டு நிர்வாகத்தையும் மேற்பார்வையிடுகிறார். அவர் 2014ல் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகியபோதில் இருந்து தொடர்ந்து நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கிறார்.
இதுமட்டுமில்லாமல், ஷிபுலால் இன்போசிஸ் நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்த தனது சகாவான சேனாபதி கோபாலகிருஷ்ணனுடன் ஆக்ஸிலர் வென்ச்சர்ஸ் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இதேபோல், தனது மகள் ஸ்ருதி நிறுவிய ரிசார்ட் தமாராவுக்குத் தலைமை பொறுப்பையும் கவனித்து வருகிறார். இந்தப் பொறுப்புகள் காரணமாக போர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 1664 இடத்திலும், இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 89 இடத்திலும் உள்ளார் 66 வயதான ஷிபுலால். இதற்கிடைய, 1991 முதல் 1996 வரை, ஷிபு அமெரிக்காவில் சன் மைக்ரோசிஸ்டம்ஸுடன் பணிபுரிந்தார் என்பது கூடுதல் தகவல்!
தகவல் உதவி: moneycontrol | தமிழில்: மலையரசு