ரயில்களில் இனி ஷாப்பிங் செய்யமுடியும் தெரியுமா...!
மேற்கு ரெயில்வேயின் அகமதாபாத் மண்டலம் சார்பில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இனி இந்திய ரயில்களில் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம் தெரியுமா? காஸ்மெட்டிக்ஸ், ஸ்டேஷனரி மற்றும் இதரப் பொருட்களை ஒரு சில ரயில்களில் வாங்கலாம் என இந்திய ரெயில்வே அண்மையில் அறிவித்துள்ளது.
இந்த முயற்சி, மேற்கு ரெயில்வேயின் அகமதாபாத் மண்டலத்தில், அகமதாபாத்–மும்பை- செண்டரல்-அகமதாபாத் கர்னாவதி எக்ஸ்பிரஸ் மற்றும் அகமதாபாத்-மும்பை செண்டரல்-அகமதாபதா டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
”இந்த சேவை இரு வழிகளிலும் கிடைக்கும். பயணிகள் டிஜிட்டல் பேமெண்ட்டில் இவற்றை வாங்கலாம். தினமும் பயணம் செய்யும் போது பயணிகள் நுகர்வோர் பொருட்களை வாங்குவதை இது சாத்தியமாக்கும்,” என ரெயில்வே தெரிவித்துள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், காகித பொருட்கள், இனிப்புகள், மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு தலை மற்றும் பாத மசாஜ் சேவை வழங்குவதை ரெயில்வே பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன. ரூ.100 எனும் கட்டனத்தில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயணிகள் இந்த சேவையை பெறலாம். இந்த சேவை, மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து செல்லும் 39 ரெயில்களில் கிடைக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன. துவக்கத்தில், இந்தூர், டேராடூம் அமிர்தசர்ஸ் மற்றும் தில்லி இடையிலான ரெயில்களில் இந்த சேவையைப் பெறலாம்.
இந்த மாத துவக்கத்தில், ஆரோக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்காக சிறப்பு ஊட்டச்சத்து உணவை ரெயில்வே அறிமுகம் செய்துள்ளதாகவும் செய்தி வெளியானது. கொன்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் மண்டோவி எக்ஸ்பிரசில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய் ரெயில்வே தனது கேட்டரிங் சேவையை நவீனமாக்கி வருகிறது. ஜனவரியில் மும்பை செண்டரல் ரெயில் நிலையத்தில் ஐ.ஆர்.சி.சி.சி பிட்சா மையத்தை நிறுவியது. ரெயில்வே சார்பில், பிட்சா வங்கும் முதல் இயதிரமாக இது அமைந்தது. இது தவிர பயணிகளுக்கு தரமான உணவு வழங்குவதிலும் ரெயில்வே கவனம் செலுத்தி வருகிறது.
செய்தி :பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்