Stock News: பங்குச்சந்தையில் எதிரொலித்த தேர்தல் முடிவுகள்; முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா?
வாரத்தின் தொடக்கம் முதலே உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தையானது நேற்று சரிவுடன் வர்த்தகமானது முதலீட்டாளர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியது. ஆனால் இன்று குஜராத் மற்றும் இமாச்சல் தேர்தல் முடிவுகளை அடுத்து இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு சற்றே உயர ஆரம்பித்துள்ளது.
வாரத்தின் தொடக்கம் முதலே உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தையானது நேற்று சரிவுடன் வர்த்தகமானது முதலீட்டாளர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியது. ஆனால், இன்று குஜராத் மற்றும் இமாச்சல் தேர்தல் முடிவுகளை அடுத்து இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு சற்றே உயர ஆரம்பித்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 42.46 புள்ளிகள் அதிகரித்து 62,463 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 23.40 புள்ளிகள் அதிகரித்து 18,575 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுக்கான காரணங்கள்:
பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சற்றே அதிகரித்துள்ளதற்கு ரிசர்வ் வங்கி வட்டி உயர்வு, கச்சா எண்ணெய் விலை மற்றும் குஜராத், இமாச்சல் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
எஸ்பிஐ
மஹிந்திரா & மஹிந்திரா
எல்&டி
நெஸ்லே
அல்ட்ராடெக் சிமெண்ட்
மாருதி
ரிலையன்ஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்,
பவர் கிரிட்
கோடக் மஹிந்திரா
ஹெச்டிஎஃப்சி லைப்
டாடா மோட்டர்ஸ்
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள்உயர்ந்து 82.34 ஆக உள்ளது.
Gold Rate Chennai: சரசரவென அதிகரிக்கும் தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் என்ன?