Stock News: அமெரிக்கா கொடுத்த நம்பிக்கை; இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதிரடி மாற்றம்!
இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீப காலமாக தடுமாற்றம் நிலவி வந்த இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (22/03/2023):
கடந்த வாரம் முழுவதும் பெரும்பாலும் இறக்கத்தை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தையானது இன்று தொடக்கம் முதலே உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
முற்பகல் வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 110.45 புள்ளிகள் அதிகரித்து 58,181 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 37.90 புள்ளிகள் அதிகரித்து 17,145 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
கிரெடிட் சூயிஸின் மீட்பு முதலீட்டாளர்களுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்ததால், இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது. மேலும், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 245 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஹெச்.சி.எல். டெக்
இன்ஃபோசிஸ்
டிவிஸ் லேப்
ஐசிஐசிஐ பேங்க்
டெக் மஹிந்திரா
இறக்கம் கண்ட பங்குகள்:
கோல் இந்தியா
ஐடிசி
கிராசிம்
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
டாக்டர் ரெட்டிஸ்