Stock News: அமெரிக்க வங்கியால் இந்திய முதலீட்டாளர்கள் உற்சாகம்; சென்செக்ஸ், நிஃப்டி கிடுகிடு உயர்வு!
இந்திய பங்குச்சந்தையானது இன்று தொடக்கம் முதலே உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது இன்று தொடக்கம் முதலே உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (27/03/2023):
கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று தொடக்கம் முதலே சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிஃப்டி 16 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் உயர்வுடன் வர்த்தமாகி வருகிறது. இது இந்திய முதலீட்டாளர்கள் மத்திய புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 150.69 புள்ளிகள் அதிகரித்து 57,688 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 46.15 புள்ளிகள் அதிகரித்து 16,991 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்வு மற்றும் அந்நாட்டின் சிலிக்கான் வேலி வங்கி கையகப்படுத்துவதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
எஸ்விபி பேங்க் கையகப்படுத்தல்:
அமெரிக்காவின் 16வது மிகப்பெரிய வங்கியான கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள 'சிலிக்கான் வேலி பேங்க்' நிதி நெருக்கடி காரணமாக திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி வங்கி மூடப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள வங்கி பங்குகளில் கடும் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இதனால் அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட முன்னணி நாடுகளின் பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டது.
இந்நிலையில், திவாலான சிலிக்கான் வேலி வங்கியை ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப் (FDIC) இலிருந்து வாங்குவதற்கு ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க்ஷேர்ஸ் இன்க் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
பவர் கிரிட்
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா ஸ்டீல்
அல்ட்ராடெக் சிமெண்ட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
சன் பார்மா
டெக் மஹிந்திரா
ஹெச்டிஎஃப்சி வங்கி
இறக்கம் கண்ட பங்குகள்:
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
ஆக்சிஸ் வங்கி
ஐசிஐசிஐ வங்கி
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து 82.31 ஆக உள்ளது.