Stock News: சரிவில் பங்குச்சந்தை; ஆனா லாபத்தை அள்ள இந்த 3 நிறுவன பங்குகளில் முதலீடு செய்யுங்க!
கடந்த சில நாட்களாகவே உயர்வுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தையானது, இன்று மீண்டும் சரிவை நோக்கி நகர்ந்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே உயர்வுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தையானது, இன்று மீண்டும் சரிவை நோக்கி நகர்ந்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 297.83 புள்ளிகள் சரிந்து 62,536 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 93 புள்ளிகள் சரிந்து 18,608 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுக்கான காரணங்கள்:
வேலைகள் தரவு, தொழிலாளர் சந்தை நிலைமைகள் மற்றும் ISM சேவைகள் ஆகியவற்றின் மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது. மேலும், ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைந்த அளவிலாவது உயர்த்தக்கூடும் என்பதால் முதலீட்டாளர்களின் கவனம் அமெரிக்க பங்குச்சந்தை மீது திரும்பியுள்ளது.
இதனால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளனர். கணிசமான வரி வருவாய், நல்ல கடன் வளர்ச்சி மற்றும் குறைந்த கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றுடன் இந்தியாவின் மேக்ரோ பொருளாதாரம் சீராக மேம்பட்டு வருகிறது. இருப்பினும் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முடிவுகளால் இந்திய பங்குச்சந்தை இறங்குமுகத்தில் வர்த்தகமாகி வருகிறது.
மேலும், இந்திய பங்குச்சந்தையில் மிகவும் முக்கியமான மெட்டல் மற்றும் ஐ.டி. துறைகளைச் சேர்ந்த பங்குகளின் மீது நிலவும் அழுத்தமும் பங்குச்சந்தையின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
கெத்து காட்டும் 3 நிறுவனங்கள்:
உலக அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, கொரோனா பாதிப்பு, கச்சா எண்ணெய் விலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களின் அழுத்தத்தால் இந்திய பங்குச்சந்தையானது சரிவில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், டிவிஎஸ் மோட்டார், அதானி எண்டர்பிரைசஸ், எச்டிஎஃப்சி ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் உற்றுநோக்க வேண்டுமென பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதானி எண்டர்பிரைசஸ்: என்டிடிவியின் 26 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலமாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் அதிக மதிப்பை பெற்றுள்ளன.
டிவிஎஸ் மோட்டார்ஸ்: தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புரோமோட்டர் குழுவான சீனிவாசன் டிரஸ்ட் நிறுவனத்தின் 25.7 லட்சம் பங்குகள் ஒரு பங்கின் சராசரி விலை ₹1,030.03 என வர்த்தகமாகியுள்ளது.
ஹெச்டிஎஃப்சி: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (எல்ஐசி) 1.2 லட்சம் பங்குகளை வாங்குவதன் மூலமாக அதன் பங்குகளின் மதிப்பு 5% வரை அதிகரித்துள்ளது. இதனால் தேசிய பங்குச்சந்தையில் ஹெச்டிஎஃப்சி பங்குகள் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
ஹெச்டிஎஃப்சி லைஃப்
அதானி எண்டர்பிரைசஸ்
ஆக்சிஸ் பேங்க்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்
எச்.சி.எல் டெக்னாலஜிஸ்
டாடா ஸ்டீல்
இன்ஃபோசிஸ்
ஓ.என்.ஜி.சி.
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து 81.87 ஆக உள்ளது.
அப்பாடா!! நிம்மதி பெருமூச்சு விட வைத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?