Stock News: இந்திய பங்குச்சந்தை உயர்வு; சென்செக்ஸ் 330 புள்ளிகள், நிஃப்டி 95 புள்ளிகள் அதிகரிப்பு!
இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (21/03/2023):
கடந்த வாரம் முழுவதும் பெரும்பாலும் இறக்கத்தை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தையானது, இன்று தொடக்கம் முதலே உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 338.58 புள்ளிகள் அதிகரித்து 57,965 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 95.05 புள்ளிகள் அதிகரித்து 17,083 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
கிரெடிட் சூயிஸின் மீட்பு முதலீட்டாளர்களுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்ததால், இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது. இன்று காலை முதலே ஆசிய பங்குச்சந்தை வர்த்தகம் பச்சை வண்ணத்தில் தொடங்கியுள்ளது, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை இந்திய பங்குச்சந்தை மீது நம்பிக்கை கொள்ளச் செய்துள்ளது. மேலும் வட்டி விகித உயர்வு முடிவில் இருந்து அமெரிக்க ஃபெடரல் வங்கி பின்வாங்க கூடும் என்ற தகவலும், இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
அதானி எண்டர்பிரைசஸ்
நெஸ்லே இந்தியா
எஸ்பிஐ லைஃப்
ரிலையன்ஸ்
லார்சன் & டூப்ரோ
இறக்கம் கண்ட பங்குகள்:
ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல்
பவர் கிரிட் லிமிடெட்
இன்போசிஸ்
இன்ஸ்டஸ் இண்ட் பேங்க்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து 82.62 ஆக உள்ளது.