Stock News: கிடுகிடுவென உயரும் ரிலையன்ஸ், டிசிஎஸ் பங்குகள்; புதிய உச்சம் நோக்கி இந்திய பங்குச்சந்தை!
இன்றைய தினம் ஆசிய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியிருந்தாலும், இந்திய பங்குச்சந்தையானது புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய தினம் ஆசிய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியிருந்தாலும், இந்திய பங்குச்சந்தையானது புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 246.49 புள்ளிகள் அதிகரித்து 63,338புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 69.30 புள்ளிகள் அதிகரித்து 18,827புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
பாலைவன சோலை:
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்வு குறித்து எடுத்துள்ள அதிரடி முடிவு ஆசிய பங்குச்சந்தையில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரான மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் எச். பவல்,
ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்வின் அளவை குறைக்க திட்டமிட்டு வருவதாகவும், ஆனால், பொருளாதாரம் நிலையான நிலைக்கு திரும்பும் வரை மக்களின் கடன் செலவுகள் அதிகரிக்கும் என்றும் கூறினார். இது வரவிருக்கும் கொள்கைக் கூட்டங்களில் சிறிய அளவிலான வட்டி விகித உயர்வுக்கே வழிவகுக்கும் என்பதை உறுதிப்படுத்தியது.
ஃபெடரல் வங்கி தலைவரின் இந்த அறிவிப்பை அடுத்து ஜப்பானின் நிக்கேய் 3 சதவீதமும், ஹாங்காங்கின் ஹாங் செங் 21 சதவீதமும் சரிந்துள்ளது. இருப்பினும், ஒப்பீட்டளவில் இந்தியாவில் நிலையான மேக்ரோ பொருளாதார நிலைமைகள் காரணமாக பங்குச்சந்தைகள் சிறப்பாக செயல்படுவதாகவும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை அதிகரித்து வரும் ஜிஎஸ்டி வசூல், மூலதனச் செலவு மற்றும் கடன் தேவை, பணவீக்கத்தைத் தளர்த்துவது ஆகியவை நிலையான பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டும் சில காரணிகள் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மற்றொருபுறம் சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தாக்கம் ஆசிய பங்குச்சந்தைகளில் எதிரொலித்து வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் போர், ஐரோப்பிய பணவீக்கம், அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, சீனாவில் கொரோனா தாக்கம் என உலக நாடுகள் முழுவதும் நிலவி வரும் பாதகமான சூழ்நிலை முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குச்சந்தையை பாலைவன சோலையாக மாற்றியுள்ளது.
5 பங்குகள் 50% வளர்ச்சி:
தேசிய பங்குச்சந்தையான குறியீட்டு எண்ணான நிஃப்டியின் மூலதனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோசிஸ் மற்றும் எச்டிஎஃப்சி ஆகிய 5 நிறுவனங்களின் பங்குகள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்ததன் மூலமாக ரூ.7.05 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
டெக் மஹிந்திரா
இன்ஃபோசிஸ்
விப்ரோ
எச்சிஎல் டெக்
டிசிஎஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஏசியன் பெயிண்ட்ஸ்
ஹெச்யுஎல்
ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க்
எம்&எம்
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 35 காசுகள் உயர்ந்து 81.42 ஆக உள்ளது.