Stock News: முதலீட்டாளர்களை ஏமாற்றிய பங்குச்சந்தை; தொடர்ந்து சரியும் ரூபாய் ஏன் தெரியுமா?
நவராத்திரி மற்றும் துர்கா பூஜை விடுமுறையைத் தொடர்ந்து நேற்று உயர்வுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை இன்று திடீரென சரிவை நோக்கி நகர்ந்து வரும் முதலீட்டாளர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நவராத்திரி மற்றும் துர்கா பூஜை விடுமுறையைத் தொடர்ந்து நேற்று உயர்வுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை இன்று திடீரென சரிவை நோக்கி நகர்ந்து வரும் முதலீட்டாளர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 238.09 புள்ளிகள் சரிந்து 57,989 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி68 புள்ளிகள் சரிந்து 17,265 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
காரணம்: அமெரிக்க பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை காரணமாக, இந்திய பங்குகளை விற்பனை செய்யும் அளவு குறைந்துள்ளது. அமெரிக்க வேலை வாய்ப்பு குறித்த தரவுகளைப் பொறுத்து, பெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை இருக்கும் என்பதால் முதலீட்டாளர்களுக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ மற்றும் ஹாங்காங் சந்தைகளில் நிலவும் சரிவும், சீன பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும், இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
டைட்டன் நிறுவனம்
எச்சிஎல் டெக்
மாருதி சுஸுகி இந்தியா
டெக் மஹிந்திரா
ரிலையன்ஸ்
விப்ரோ
இறக்கம் கண்ட பங்குகள்:
இண்டஸ்இண்ட் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
டாடா ஸ்டீல்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்)
ஐடிசி
ஆக்சிஸ் வங்கி
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 33 காசுகள் சரிந்து 82.23 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. முந்தைய அமர்வின் போது, 81.88 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 33 காசுகள் சரிந்து 82.23 ரூபாயாக வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், இன்று முதல் அரசு நடத்தும் வங்கிகள் மூலமாக ரிசர்வ் வங்கி டாலர்களை விற்பனை செய்யக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.