Stock News: அதானி எடுத்த அதிரடி முடிவு; கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!
இந்திய பங்குச்சந்தையானது இன்றைய வர்த்தகம் சரிவுடன் நடைபெற்று வருவது முதலீட்டாளர்களை கவலை அடைய வைத்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது இன்றைய வர்த்தகம் சரிவுடன் நடைபெற்று வருவது முதலீட்டாளர்களை கவலை அடைய வைத்துள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (02/02/2023):
கடந்த வாரம் முதலே அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடி குறித்த குற்றச்சாட்டுக்களால் இந்திய பங்குச்சந்தையான கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் காரணமாக பங்குச்சந்தை புதிய உச்சத்துடன் வர்த்தகமானது.
ஆனால், இன்று காலை முதலே சென்செக்ஸ் 0.31 சதவீதமும், நிஃப்டி 0.47 சதவீதம் அளவிற்கு சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 74.65 புள்ளிகள் உயர்ந்து 59,785 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 29.15 புள்ளிகள் சரிந்து 17,588 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
ஊசலாட்டத்திற்கான காரணம் என்ன?
இந்திய பங்குச்சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் சற்று உயர்வுடன் வர்த்தகமாகி வந்தாலும், நிஃப்டி கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதானி நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி நிறுவனப் பங்குகள் கடும் சரிவை கடந்த ஒரு வாரமாகச் சந்தித்துவருகிறது. இந்நிலையில்,
ரூ.20000 கோடி மதிப்பிலான எஃப்.பி.ஓ (FPO) பங்கு விற்பனையை தொடங்கவிருந்த அதானி குழுமம் அந்த முடிவில் இருந்து நேற்று பின்வாங்கியுள்ளது.
இதனால் மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து இன்று காலை பங்குச்சந்தை திறக்கப்பட்டதில் இருந்தே அதானி குழும பங்குகள் சரிவை நோக்கி நகர்ந்து வருவது இந்திய பங்குச்சந்தைக்கான சரிவாக அமைந்துள்ளது. மேலும், பட்ஜெட்டில் பொருளாதார மந்தநிலையை சமாளிப்பது குறித்து எந்தவித முக்கிய அறிவிப்பும் இடம்பெறாததும் சரிவுக்கான காரணமாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஐடிசி
அல்ட்ராடெக் சிமெண்ட்
இண்டஸ்இண்ட் பேங்க்
டைட்டன்
மாருதி
இறக்கம் கண்ட பங்குகள்:
பஜாஜ் ஃபைனான்ஸ்
என்டிபிசி
ஏசியன் பெயிண்ட்ஸ்
டாடா ஸ்டீல்
ஹெச்டிஎஃப்சி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பவர் கிரிட்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 22 காசுகள் அதிகரித்து 81.70 ஆக உள்ளது.
அதானியால் எல்.ஐ.சி.க்கு ஏற்பட்ட பரிதாபம் - இரண்டு நாட்களில் ரூ.16,580 கோடி இழப்பு!