Stock News: ஐ.டி. பங்குகளில் விழுந்த பேரிடி; சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தையானது இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தையானது இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (13/04/2023):
கடந்த 3 நாட்களாக புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தையானது இன்று பெரும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 199.45 புள்ளிகள் சரிந்து 60,183 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 52.85 புள்ளிகள் சரிந்து 17,760 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
வங்கித் துறைகளில் ஏற்பட்டுள்ள தடுமாற்றமும், பணவீக்கமும் உலகளாவிய பங்குச்சந்தையில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் ஐ.டி. நிறுவன பங்குகள் கிட்டதட்ட 2 சதவீதம் வரை சரிந்துள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெக் மஹிந்திரா 2.47 சதவீதமும், இன்ஃபோசிஸ் 1.98 சதவீதமும், ஹெச்.சி.எல். டெக் 1.75 சதவீதமும், டிசிஎஸ் 1.75 சதவீதம், விப்ரோ 1.07 சதவீதமும், சோனாட்டா சாப்ட்வேர் லிமிடெட் 1.16 சதவீதமும் சரிந்துள்ளன.
ஏற்றம் கண்ட பங்குகள்:
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்,
பிரிட்டானியா
ஹெச்.டி.எஃப்சி லைஃப்
ஓஎன்ஜிசி
மஹிந்திரா & மஹிந்திரா
இறக்கம் கண்ட பங்குகள்:
இண்டஸ்இண்ட் பேங்க்
டெக் மஹிந்திரா
இன்ஃபோசிஸ்
டிசிஎஸ்
ஹெச்.சி.எல். டெக்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 81.97 ஆக உள்ளது.