Stock News: இந்த மூன்று துறை பங்குகளால் வீழ்ந்த இந்திய பங்குச்சந்தை; காரணம் என்ன?
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 276.91 புள்ளிகள் சரிந்து 62,595 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 70.10 புள்ளிகள் சரிந்து 18,626 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே உயர்வுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தையானது, இன்று மீண்டும் சரிவை நோக்கி நகர்ந்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 276.91 புள்ளிகள் சரிந்து 62,595 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 70.10 புள்ளிகள் சரிந்து 18,626 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுக்கான காரணங்கள்:
அமெரிக்காவின் பண்ணை அல்லாத வேலை குறித்த தரவுகள் வெளியாகின. அதில், அமெரிக்க முதலாளிகள் நவம்பரில் எதிர்பார்த்ததை விட அதிகமான தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளதும், ஊதியத்தை உயர்த்தியுள்ளது மந்தநிலை குறித்த கவலையை குறைக்க உதவியது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் ஊசலாட்டம் நிலவி வருகிறது.
மற்றொருபுறம் சீனா முதலீட்டாளர்களை தன் பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் குறைய காரணமாக அமைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையைப் பொறுத்தவரை ஐடி, பார்மா மற்றும் எஃப்எம்சிஜி ஆகியவற்றில் ஏற்ற, இறக்கம் நீடித்து வருவதால் முதலீட்டாளர்கள் இத்துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்
டாடா ஸ்டீல்
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
ஓஎன்ஜிசி
யுபிஎல்
இறக்கம் கண்ட பங்குகள்:
எச்டிஎஃப்சி
ஹெச்யுஎல்
நெஸ்லே இந்தியா
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்
எம்&எம்
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 81.25 ஆக உள்ளது.
Gold Rate Chennai: சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து, புலம்ப வைத்த தங்கம் விலை!