Stock News: கிடுகிடுவென உயரும் இந்திய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி இன்றைய நிலவரம் என்ன?
இந்திய பங்குச்சந்தைகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்வை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்வை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 539.97 புள்ளிகள் அதிகரித்து 56,941 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 146.35 புள்ளிகள் உயர்ந்து 16,966 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
காரணம்: ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 5.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தக புள்ளிகள் அதிகரித்துக் காணப்படுகிறது.
துறை ரீதியாக, நிஃப்டி PSU வங்கி போன்ற துறைகள் அதிகபட்சமாக - 1 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளன. தவிர, நிஃப்டி வங்கி, நிஃப்டி ரியாலிட்டி மற்றும் நிஃப்டி ஆட்டோ குறியீடுகள் 0.03 முதல் 0.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
ஏற்றம் கண்ட பங்குகள்:
சன் பார்மா
ஐடிசி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அல்ட்ராடெக் சிமெண்ட்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி ட்வின்ஸ்
டாடா ஸ்டீல்
டெக் மஹிந்திரா
இன்ஃபோசிஸ்
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் உயர்ந்து 81.85 ரூபாயாக உள்ளது.
Gold Rate Chennai: தொடர்ந்து உயரும் தங்கம் விலை; இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?