Stock News: சரிவில் இந்திய பங்குச்சந்தை - முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளின் புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது காலை முதலே சரிவை நோக்கி நகர்ந்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளின் புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது காலை முதலே சரிவை நோக்கி நகர்ந்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 478.13 புள்ளிகள் சரிந்து 56,949 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 123.85 புள்ளிகள் சரிந்து16,966 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
காரணம்: அமெரிக்க, ஜப்பான், ஹாங்காங் போன்ற சர்வதேச சந்தைகளின் வர்த்தகம் சரிவடைந்ததுள்ளதன் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
என்டிபிசி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்)
சன் பார்மா
அல்ட்ராடெக் சிமெண்ட்
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
ரிலையன்ஸ்
ஆக்சிஸ் வங்கி
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
விப்ரோ
இறக்கம் கண்ட பங்குகள்:
டைட்டன்
நெஸ்லே இந்தியா
இன்ஃபோசிஸ்
இன்டஸ்இன்ட் பேங்க்
மாருதி சுஸுகி ஆஃப் இந்தியா
ஏசியன் பெயிண்ட்ஸ்
டிசிஎஸ்
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து 81.78 ரூபாயாக உள்ளது.