Stock News: பங்குச்சந்தையில் எதிரொலித்த ரிசர்வ் வங்கி முடிவு; சென்செக்ஸ், நிஃப்டி கிடுகிடு உயர்வு!
இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (06/06/2023):
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது இந்திய பங்குச்சந்தையில் பாசிட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 145.82 புள்ளிகள் உயர்ந்து 63,301 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 47.30 புள்ளிகள் உயர்ந்து 18,773 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணங்கள்:
ரிசர்வ் வங்கியின் இருமாத நாணயக் கொள்கை கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்திய பங்குச்சந்தையில் முதலீடுகளை அதிகரிக்க உதவியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
என்டிபிசி
ஜேஎஸ்டபள்யூ
பவர் கிரிட்
ஹீரோ மோட்டோ கார்ப்
ஓஎன்ஜிசி
டாடா மோட்டர்ஸ்
அதானி எண்டர்பிரைசஸ்
டாடா ஸ்டீல்
இறக்கம் கண்ட பங்குகள்:
கோடக் மஹிந்திரா பேங்க்
பிபிசிஎல்
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்
டிசிஎஸ்
சன் பார்மா
ஆக்சிஸ் பேங்க்
ஹெச்சிஎல் டெக்னாலாஜிஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து 82.59 ஆக உள்ளது.
Gold Rate Chennai: இன்று தங்கம் வாங்க நல்ல சான்ஸ் - சவரனுக்கு ரூ.320 குறைவு!