Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

லாக்டவுனில் தன் மாணவர்களை மிஸ் பண்ண ஆசிரியை செய்ததை பாருங்க...

தொடக்கப்பள்ளி ஆசிரியை தான் வகுப்பெடுத்த ஒவ்வொரு குழந்தையை நினைவுப் படுத்தும் வகையில் 23 டால்களை நிட்டிங் செய்துள்ளார்.

லாக்டவுனில் தன் மாணவர்களை மிஸ் பண்ண ஆசிரியை செய்ததை பாருங்க...

Monday May 25, 2020 , 2 min Read

கோவிட் தாக்கத் தொடங்கிய உடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் உலகமெங்கும் பல நாடுகளில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. கடந்த 3 மாதமாக மாணவர்கள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சில பள்ளிகள் மட்டுமே ஆன்லைனில் வகுப்பெடுக்க பலரும் அடுத்து என்ன என குழம்பிப் போய் இருக்கிறார்கள்.


இந்த ஊரடங்கால் வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தைகள் அதாவது ப்ரைமரி வகுப்புகளில் இருக்கும் மாணவ-மாணவிகள் நிச்சயம் தங்கள் பள்ளி, ஆசிரியர் மற்றும் ஃப்ரெண்ட்ஸ்களைப் பார்க்காமல் ஏங்கிப் போய் இருப்பார்கள். ஆனால் நெதர்லாந்தில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியை தன் பாசமிகு மாணவர்களைக் காணாமல் தவித்துப் போனார்.


தொடக்கப்பள்ளி ஆசிரியை ஆன அவரால் தான் வகுப்பெடுத்த குட்டீஸ்கள் அடுத்த க்ளாஸ் செல்வதால் மீண்டும் அவர்களைப் பார்க்காமல் போனது கஷ்டமாக இருந்துள்ளது. அதற்கு அவர் ஓர் சூப்பர் ஐடியா கண்டுபிடித்தார்.


எப்படியும் லாக்டவுன், ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் அளவிற்கு இல்லாத தொடக்கப்பள்ளி மாணவர்களை நினைவில் கொள்ள தன் கைவினை ஆற்றலை பயன்படுத்தினார்.

students dolls

பட உதவி: Mymodernmet

நெதர்லாந்தில் ஹார்லென் என்ற இடத்தில் Dr. பாவின்க் என்ற பள்ளியில் பள்ளி ஆசிரியராக இருக்கிறார் மேன்ஸ்டெர் வான் டெர் டுவின். இவர் தினமும் தன் செல்ல மாணவர்களை சந்தித்து பாடமெடுப்பதை விரும்பிச் செய்துள்ளார்.

“பள்ளிக்குச் செல்லாமல், என் மாணவ-மாணவிகளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. அவர்களை நான் ரொம்ப மிஸ் பண்ணேன்,” என்கிறார் மேன்ஸ்டெர்.

வீட்டில் என்ன செய்வதென்று தெரியாமல், பிண்ட்ரெஸ்ட் தளத்தில் கையால் பின்னப்பட்ட அழகிய பொம்மைகள் செய்யும் படங்களை பார்த்துள்ளார். உடனே அவர் கையில் எடுத்தது நூல் மற்றும் பின்னல் ஊசியை.


23 மாணவர்கள் கொண்ட மேன்ஸ்டெர், அவர்களின் சிறிய உருவத்தினை பின்னலாடையாக செய்ய முடிவெட்டுத்தார். தன்னிடம் இருந்த அவர்களின் புகைப்படம், அவர்கள் அணிந்து வரும் ஆடைகள் மற்றும் இதர விஷயங்களை பிரதிபலிக்கும் விதமாக பொம்மைகளை பின்னத்தொடங்கினார்.

“ஒரு பொம்மையை பின்ன 3-4 மணி நேரம் எடுத்துக்கொண்டேன். அந்தந்த குழந்தை அணியும் ட்ரெஸ், கண்ணாடி, தலையில் வைக்கும் க்ளிப், போ என ஒவ்வொரு குழந்தையை நினைவுப் படுத்தும் வகையில் 23 டால்களை நிட்டிங் செய்தேன்,” என்கிறார்.

சரி குட்டீஸின் பொம்மை செய்தது மட்டுமல்ல, மேன்ஸ்டெர் தன்னைப்போல ஒரு பொம்மையும் செய்துள்ளார். அண்மையில் இந்த குழந்தைகள் லாக்டவுனுக்கு முன் தாங்கள் விட்டுச் சென்ற பொருட்களை எடுத்துச் செல்ல பள்ளிக்கு வந்தபோது அவர் அந்த பொம்மைகளை பரிசாகத் தந்துள்ளார்.

Netherland teacher

பள்ளி ஆசிரியை மேன்ஸ்டெர் வான் டெர் டுவின்

தங்களைப்போன்ற ஒரு மினி பொம்மையை பார்த்த குழந்தைகள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துள்ளனர். அப்படியே தங்களின் செல்ல டீச்சருக்கு அன்பையும், நன்றியையும் தந்துள்ளனர்.


மேன்ஸ்டெர் தற்போது தனது புது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுக்கத் தொடங்கியுள்ளார். அப்படியே இந்த பாட்ச் குழந்தைகளின் பின்னலாடை பொம்மைகளையும் செய்யத் தொடங்கியுள்ளார். இதே போல் எங்களுக்கும் எங்கள் மாணவர்களின் பொம்மைகளை செய்து கொடுங்க என மற்ற ஆசிரியர்கள் கேட்க, அதற்கு டைம் இல்லை என மறுத்துவிட்டார் தற்போது பிசியாக பின்னிக்கொண்டிருக்கும் மேன்ஸ்டெர்.


தகவல் உதவி: Mymodernmet