[TechSparks 2020] முதல் நாள் சிறப்பம்சங்கள்: ஸ்ரீதர் வேம்பு, அனு ஹரிஹரன், பீட்டர் கெம்ஸ்: ஊக்கம் தரும் பகிர்வுகள்!
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவுடனான துடிப்பான உரையாடலுடன் துவங்கிய டெக்ஸ்பார்க்ஸ் 2020 மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில், கரன் பஜாஜ் மற்றும் அனு ஹரிஹன உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உடனான ஊக்கம் தரும் உரையாடலை விட டெக்ஸ்பார்க்ஸ் 2020 மாநாட்டிற்கு பொருத்தமான துவக்கம் அமைய வாய்ப்பில்லை. விஜயதசமி அன்று உள்ளூர் கோவிலுக்குச் சென்று விட்டு வந்தவர் உரையாடலில் பங்கேற்றார்.
ஆலையத்திற்கு செல்வதற்கான உடையுடனே, யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷரத்தா சர்மாவுடன் பேசிய ஸ்ரீதர் வேம்பு,
“கிராமப்புற இந்தியாவை மையமாகக் கொண்டு பொறியாளர்களின் வலைப்பின்னலை நிறுவனம் உருவாக்கி வருவது பற்றி பேசினார். பணியிடத்தில் தான் கடைப்பிடிகும், மினிமலிசம், எளிமை மற்றும் பணிவு ஆகிய அம்சங்கள் பற்றியும் அவர் பேசினார்.
இது வரை இதற்கு முன்னர் யாரும் கண்டறிந்திராத வகையில் இந்த உரையாடல் ஸ்ரீதர் வேம்புவை பற்றி நெருக்கமான உணர வைத்தது. குறிப்பாக, வர்த்தகத்தில் ஆன்மிகத் தன்மை மற்றும் இந்திய பாரம்பரியம் மற்றும் வேர்களில் தனது நம்பிகை பற்றி அவர் பகிர்ந்து கொண்டார்.
காலையில் ஸ்ரீதர் வேம்பு கருத்துகள் ஊக்கம் அளித்த நிலையில், Y Combinator நிறுவனத்தின் அனு ஹரிஹரன், தனது யதார்த்தமான கருத்துகளால் கவர்ந்தார்.
முதல் நாள் நிகழ்வின் முடிவில், தொழில்முனைவு பாடங்கள் மனதில் பதிந்தன. தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளில், பிராண்டிங், வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கம் ஆகிய வர்த்தகத்தின் அடிப்படை அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
முதல் நாள் நிகழ்வின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
வேர்களும் தொழில்நுட்பமும்
11வது பதிப்பில் மெய்நிகர் வடிவில் இணையம் மூலம் நடைபெறும் டெக்ஸ்பார்க்ஸ் 2020 மாநாட்டில், ஸ்ரீதர் வேம்பு பல சுவாரஸ்யமான விஷயங்களைக் குறிப்பிட்டார். மனித மனதில் இருந்து தொழில்நுட்பம் உருவாவதாகக் குறிப்பிட்டவர், அதை ஊக்குவிப்பதற்கான அமைப்பு நோக்கிலான கலாச்சாரம் தேவை என்றார். பொருட்களை உருவாக்கும் மனநிலை இல்லாத காலத்தில் நிறுவனத்தை துவக்கிய நிலையில் தனக்கான விதிகள் புத்தகத்தை உருவாக்கிக் கொண்டதாக தெரிவித்தார்.
6 பில்லியன் டாலர் மதிப்பீடு, 50 மில்லியன் பயனாளிகள், 45க்கும் மேற்பட்ட செயலிகள், 9,000 ஊழியர்கள் மற்றும் 11 சர்வதேச அலுவலகங்களைக் கொண்ட ஜோஹோ நிறுவனத்தை உருவாக்கியவர் என்ற முறையில் அவரது விதிகள் புத்தகம் கவனிக்கத்தக்கது.
“பொருட்கள் மனநிலையை பெற, நீங்கள் நிச்சயமற்றத்தன்மையை தழுவிக்கொள்ள வேண்டும். சரியான ஐடியாக்கள் பயனளிக்காது. நீங்கள் வளைந்து கொடுக்கும் தன்மை பெற வேண்டும். இந்த கருத்தை தான் ஜோவோவில் ஆழமாக உருவாக்கியிருக்கிறோம்,” என்றார்.
உலக அளவிலான சேவையை உருவாக்குவது பற்றி பேசியவர், உலகிற்கான நிறுவனத்தை, கிராமங்களில் உள்ள சிறந்த திறமைகளைக் கொண்டு உருவாக்குவது பற்றியும் விவரித்தார்.
இந்தியாவில் கவனம்
ஜோஹோ செயலில் உணர்த்த நிகழ்தியிருக்கும் வகையில், இந்தியாவில் இருந்து உலகத்தரமான நிறுவனத்தை உருவாக்குவது பற்றி பேசிய இதன் நிறுவனர் ஆயிரக்கணக்கான மெய்நிகர் பங்கேற்பாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், ஒய் காம்பினேட்டரின் கண்டினியூட்டி பண்ட் பங்குதாரர் அனு ஹரிஹரன், இந்தியாவில் இருந்து அடுத்த பெரிய உலக நிறுவனத்தை உருவாக்குவது பற்றிய சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார்.
ஷரத்தா சர்மாவுடன், ஃபயர்சைடு உரையாடலில் ஈடுபட்ட அனு, இந்தியாவில் இருந்து உலக நிறுவனத்தை உருவாக்குவது பற்றி பேசினார். தொழில்நுட்பம், வளர்ச்சி, தொழில்முனைவு ஆகிய அம்சங்கள் பற்றி பேசினார்.
அனு, Convoy மற்றும் Brex நிறுவனங்களை அவற்றின் இயக்குனர் குழு உறுப்பினர் என்ற முறையில் வழி நடத்தி வருவதோடு, ரேசர்பே மற்றும் மீஷூ ஆகிய நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கி வருகிறார். ஸ்டார்ட் அப்கள் தங்களை நேசிக்கும் 100 பயனாளிகளை கண்டறிய வேண்டும், உங்களை விரும்பும் மில்லியன் பயனாளிகளை அல்ல என்று அவர் தெரிவித்தார்.
தொழில்முனைவோர் தங்கள் முதல் கட்டத்தை கடப்பதன் முக்கியத்துவம் பற்றியும் அனு பேசினார். ஒய் காம்பினேட்டரில் இதை பூஜ்ஜியம் முதல் ஒன்றை நோக்கிய கட்டம் என குறிப்பிடுவதாக தெரிவித்தார்.
“நீங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பதில் கவனம் செலுத்துவது தான் முக்கியம். உங்கள் பொருள் என்ன? உங்கள் தனித்தன்மை வாய்ந்த உள்ளொளி என்ன? உங்களை விரும்பும் மில்லியன் பயனாளிகளுக்கு பதிலாக நேசிக்கும் 100 பயனாளிகளை பெற்றுள்ளீர்களா? என்றார்.
அடுத்து வரும் பத்தாண்டுகளில் இந்திய ஸ்டார்ட் அப்’கள் முக்கியப் பங்காற்றுவதற்கான போக்குகள் பற்றி குறிப்பிட்ட அனு, “அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி அதிகரிப்பு, நுகர்வோரின் வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கும். இது நிறுவனங்கள் செழிக்க உதவும்,” என்றார்.
அடுத்த பத்தாண்டுகளில், உலக தொழில்நுட்பச் சூழலில், சிலிக்கான்வேலி, பெய்ஜிங் மற்றும் பெங்களூரு ஆகியவை முக்கிய அங்கம் வகிக்கும் என்றார்.
இந்திய பல்கலைக்கழங்களை அணுகி வாய்ப்புள்ள தொழில்முனைவோரை கண்டறிவதில் துவங்கி, இந்திய நிறுவனர்களின் போட்டியை எதிர்நோக்கும் தன்மை, தொடர்ந்து செயல்படும் தன்மை மற்றும் இந்திய நிறுவனர்களிடன் மேலும் துணிவு மற்றும் உலக அளவிலான ஸ்டார்ட் அப்’பாகும் தன்மையை விரும்புவது ஆகிய அம்சங்களை எதிர்பார்ப்பது பற்றியும் குறிப்பிட்டார்.
வேகமான வளர்ச்சி
அண்மையில் பைஜுஸ் நிறுவனத்தால் 300 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தப்பட்ட கல்வி நுட்ப நிறுவனமான WhiteHat Jr நிறுவனத்தின் கரண் பஜாஜ் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
“குழந்தை நலப் பிரச்சனை, குடும்பப் பொறுப்புகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, பணிச் சூழலில் அதிகம் பங்கு வகிக்காத, ஆனால் மிகவும் திறமை வாய்ந்த, படித்த பெண்களை இணைத்துக்கொண்டதே வெற்றிக்கு வழி வகுத்தது” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த திறமையாளர்களை பயன்படுத்தி நேரடி இணைய வகுப்புகளை இந்த ஸ்டார்ட் அப் நடத்தி வருகிறது, இந்த மாதிரியைக் கொண்டு சர்வதேச அளவிலும் விரிவாக்கம் செய்தது.
நட்சத்திர சக்தி
டெக்ஸ்பார்க்ஸ் மாநாடு மனித தொடர்புகள் இல்லாமல் நிறைவடையாது. இயக்குனர், திரைக்கதையாசிரியர், எழுத்தாளர், மாடல் என பன்முகம் கொண்ட, தாஹிரா காஷ்யம் குரானா, தனது புதிய புத்தகமான 12 Commandments of a Woman குறித்து பேசினார்.
தான் உரக்கப் பேசும் விஷயங்களை நகைச்சுவையுடன் புத்தகத்தில் கையாண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
உங்கள் அனுபவங்களை முறைப்படுத்துங்கள் என்றார்.
இந்திய மற்றும் சர்வதேச அளவில் முக்கியமாக விளங்கும் ஸ்டார்ட் அப் பிரமுகர்களின் மாஸ்டர் கிளாஸ் நிகழ்வுகளும் அரங்கேறின. பேடிஎம் துணைத்தலைவர் சவுரப் ஜெயின், இந்தியாவில் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்’பை உருவாக்குவது பற்றி பேசினார்.
போஸ்ட்மேன் நிறுவனர் அபினவ் அஸ்தனா உலக அளவிலான சேவையை உருவாக்குவது பற்றி பேசினார். செக்கோயா கேபிட்டல் இந்தியாவின் பீட்டர் கெம்ப்ஸ், ஓரியோஸ் வென்சர் பாட்னர்ஸ் நிர்வாக பங்குதாரர் அனூப் ஜெயின் ஆகியோர் டிஜிட்டல் இந்தியா பற்றி பேசினர்.
மேக் சக்சஸ் இணை நிறுவனர் யூலியா அசலமோவா, சர்வதேச அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார். APAC Cloudflare நிறுவனத்தின் நிதி மிஸ்ரா, மேம்பட்ட சேவை வழங்குவது பற்றி பகிர்ந்து கொண்டார்.
ஆங்கில கட்டுரையாளர்: ராஷி வர்ஷனி, அபராஜிதா சக்சேனா | தமிழில்- சைபர்சிம்மன்