இந்தியாவில் இருந்து வாகன உதிரிபாகங்களை வாங்கும் டெஸ்லா - எலான் மஸ்க் மெகா என்ட்ரி பிளான்?
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்த ஆண்டு 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான உதிரிபாகங்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடும் என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்த ஆண்டு 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான உதிரிபாகங்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடும் என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கால் பதிக்க முயலும் டெஸ்லா:
அமெரிக்காவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது வர்த்தகத்தை தொடங்க நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறது. ஆனால், இதற்கு 100 சதவீத இறக்குமதி வரி ஒரு பெரிய தடையாக இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் டெஸ்லா இந்தியாவிற்குள் வர்த்தகத்தை தொடங்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா இந்த ஆண்டு இந்திய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து 1.7-1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான உதிரிபாகங்களை வாங்கத் தயாராகி வருவதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, டெஸ்லா நிறுவனம் சுமார் $1 பில்லியன் மதிப்பிலான வாகன உதிரிபாகங்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்தது. வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACMA) ஆண்டு கூட்டத்தில் பேசிய பியூஷ் கோயல்,
"டெஸ்லா ஏற்கனவே கடந்த ஆண்டு ஒரு பில்லியன் டாலர் உதிரிபாகங்களை வாங்கியுள்ளார்கள் என நான் நினைக்கிறேன். டெஸ்லாவுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. இந்த ஆண்டு அவர்களின் இலக்கு கிட்டத்தட்ட $1.7 பில்லியன் அல்லது $1.9 பில்லியன் ஆகும்,” எனக்கூறினார்.
டெஸ்லாவின் இறக்குமதி கடந்த ஆண்டை விட இரட்டிப்பாகும் என்று தெரிவித்தார். மின்சார வாகனங்கள் தான் எதிர்காலம் என்று தான் நம்புவதாக பியூஷ் கோயல் கூறினார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்ளூர் வாகன உதிரிபாகங்கள் துறையின் பங்கு 2.3 சதவீதம் எனத் தெரியவந்துள்ளது.
2025-ம் ஆண்டுக்குள் இந்தியா வாகன உதிரிபாகங்களில் உலகில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.

இறக்குமதி வரியால் சிக்கல்:
டெஸ்லா நாட்டில் முதலீடு செய்ய விரும்புகிறது. ஆனால், தற்போது இந்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரி விதித்து வருகிறது. டெஸ்லா இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன் அதை குறைக்க வேண்டும் என்று கோருகிறது. இருப்பினும், மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆனால், சமீபத்தில் ஜூன் மாதம் பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு எலான் மஸ்க் வெளியிட்ட அறிக்கையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புவதாகக் கூறினார்.
டெஸ்லாவின் முதலீடு தொடர்பாக டெஸ்லாவுக்கும் இந்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எலான் மஸ்க் இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையை அமைக்க விரும்புகிறார். இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க டெஸ்லா கோரியுள்ளது. இந்தக் கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்து வருகிறது.
ஊக்கத் தொகை திட்டம்:
முன்னதாக, டெஸ்லாவுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான தனிக் கொள்கையை உருவாக்கப் போவதில்லை என்று அரசாங்கம் கூறியது. மேலும், ஆட்டோ மற்றும் மேம்பட்ட வேதியியல் கலங்களுக்கான PLI போன்ற தற்போதைய திட்டங்களின் கீழ் ஆதரவு நடவடிக்கைகளைப் பெற நிறுவனம் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்காகவும், புதிய வேலைவாய்ப்புகளை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்றும், சுயசார்பு இந்தியா என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு பிஎல்ஐ திட்டத்தை அறிமுகம் செய்தது.
பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ஏசிசி பேட்டரி, ஆட்டோ, ஆட்டோ-கூறுகள் மற்றும் ட்ரோன் தொழில்களுக்கு ரூ.18,100 கோடி மற்றும் ரூ.26,058 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் டெஸ்லா ஊக்கத்தொகை பெற முயற்சிக்கலாம் எனக்கூறப்படுகிறது.
புதிய முதலீடுகளையும், புதிய வாய்ப்புகளையும் இத்துறைக்கு ஈர்ப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் அதிகரிக்கும் முதலீடு:
எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் துறை, உலகம் முழுவதும் வளர்ந்து வருவதாகவும், இந்தியாவிலும் அந்த வளர்ச்சி காணும் என்றும் அவர் கூறினார்.
“எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் கட்டாய முதலீட்டு வழக்காக மாறுவதை நாங்கள் ஏற்கனவே காண்கிறோம். இந்தச் சூழ்நிலையில், விரைவில் எதிர்காலத்தில் இந்தியாவில் அதிக முதலீடுகள் மற்றும் மின்சார வாகனங்களின் பெரிய உற்பத்தி வெளியீட்டைக் காண விரும்புகிறோம்,” என்றார்.
2030 ஆம் ஆண்டளவில் வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்களை வாங்குவது மிக முக்கியமானதாக மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனாவின் பிளஸ் ஒன் மூலோபாயத்தால் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதையும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
இந்தியா அவர்களுக்கு நல்ல வணிகச் சூழல், திறன்கள், நிர்வாகத் திறமை, பெரிய சந்தை மற்றும் 1.4 பில்லியன் மக்களால் உருவாக்கப்பட்ட தேவை ஆகியவற்றை வழங்குகிறது. பொருளாதாரம், ஏராளமான இளம் தலைமுறையினர், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று. இவை அனைத்தும் ஒரு கட்டாய முதலீட்டு இடமாக ஆக்குகிறது. எனவே உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் சீனாவைத் தாண்டி இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

டெஸ்லாவின் புதிய CFO ஆக பதவியேற்கும் இந்திய வம்சாவளி நபர்; யார் இந்த வைபவ் தனேஜா?