’TransformED Fellowship’- தமிழ்நாட்டு கல்விச்சூழலை மாற்ற ஒரு வாய்ப்பு!
மதிப்பெண்ணுக்காக விரட்டப்படும் மாணவர்கள் அதனால் மனம் உடைவதையும், பிற்காலத்தில் வேலைவாய்ப்புகள் இல்லாமல் திணறி நிற்பதையும் தினம் தினம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் கூட பொதுத்தேர்வு நடத்தப்படவிருப்பதாக வெளியான செய்திக்கு எதிராக பல கருத்துக்களை சமூக வலைதங்களங்களில் கடந்தபடியே இருக்கிறோம். ஆனால், நடைமுறையில் இந்த அதிகாரத்திற்கு எதிராக நாம் இயங்குவதில்லை.
சில இயக்கங்கள், நிறுவனங்கள் கல்விச் சூழலில் மாற்றத்தை உண்டாக்குவதற்கான முயற்சிகளை எடுக்கிறார்கள். இந்தியாவில் கிடைக்கும் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் இயங்கிக் கொண்டிருக்கும் ’பூமி’ மற்றும் ’வித்தியா விதை’ எனும் இரண்டு நிறுவனங்கள், ’ட்ரான்ஸ்ஃபார்ம்-எட் எனும் ஃபெல்லோஷிப்’பை (TransformED Fellowship) இந்த நோக்கில் வடிவமைத்திருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தின் வழியே தமிழ்நாட்டின் கல்விச்சூழலை மாற்றி, அடுத்த பத்து வருடங்களில் ஒரு மில்லியன் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு நல்ல தாக்கத்தை உண்டாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இந்த புரொஃபஷனல் திட்டத்தின் வழியே, இளைஞர்களை மாற்றத்திற்கான செயலாக்குநர்களாக உருமாற்றப்படுவார்கள். ஒரு பள்ளிக்கூடத்தின் சூழலியலை மாற்றுவதற்கு கற்பிக்கப்பட்டிருப்பார்கள்.
இந்த திட்டத்தில் பங்கேற்பவர்கள் இரண்டு வருடங்களுக்கு அரசு பள்ளிகளிலும், பிற வருவாய் குறைந்த பள்ளிகளிலும் இரண்டு வருடத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். அங்கிருக்கும் ஆசிரியர்களின் முன்னேற்றத்திலும், பள்ளித் தலைவர்களின் நிர்வாகத் திறமையின் முன்னேற்றத்திலும், மொத்த பள்ளியின் முன்னேற்றத்திலும் இவர்கள் கவனம் செலுத்துவார்கள்.
பங்கேற்பாளர்கள் பொறுப்புள்ள சமூக தொழில்முனைவோராக மாறுவதற்கு இந்த ஃபெல்லோஷிப் உதவும் வேளையில், இந்த அமைப்பையும், உள், வெளி தாக்கங்களையும் புரிந்துக் கொள்ளவும் வழிநடத்தும். சிக்கல்களை கண்டறிதல், மாற்ற மேலாண்மை, அதிகாரம் இல்லாமல் தாக்கத்தை உண்டாக்குவது, வளங்களை முழுமையாக பயன்படுத்துதல் என பிற தளங்களிலும் பயிற்சி அளிக்கப்படும்.
ஃபெல்லோஷிப்பை நிறைவு செய்யும் பொழுது, பங்கேற்பாளர்களுக்கு 5-8 பள்ளிக்கூடங்களையும், பிற பங்கேற்பாளர்களையும் வழிநடத்தும் வாய்ப்பு வழங்கப்படும். இதன் வழியே ஒரு பெரிய சூழலியலை புரிந்து கொள்ளும் திறமை வலிமையாக்கப்படும். ஐந்து வருடங்களில், தங்களுடைய சமூகங்களிலும் பிற சமூகங்களில் இருக்கும் பள்ளிகளில் மாற்றங்களை உருவாக்குபவர்களாக உருமாறுவார்கள்.
இந்த வருட ஃபெல்லோஷிப்பில் சென்னையிலும் சென்னையைச் சுற்றியும் இருக்கும் 1,500 குழந்தைகளும்,150 ஆசிரியர்களும், 15 பள்ளி தலைவர்களும் உட்படுத்தபடுவார்கள். அடுத்த மூன்று வருடங்களில் இரண்டு மாநிலங்களில் 10,000 குழந்தைகளும், 1000 ஆசிரியர்களும், 100 பள்ளி தலைவர்களும் உட்படுத்தப்படுவார்கள்.
அடுத்த பத்து ஆண்டுகளில் ஐந்து முதல் பத்து மாநிலங்களில் ஒரு மில்லியன் குழந்தைகளும், 1,00,000 ஆசிரியர்களும், 10,000 பள்ளி தலைவர்களும் உட்படுத்தப்படுவார்கள்.