மாணவனுக்காக பேருந்து நேரத்தையே மாற்றிய போக்குவரத்துத் துறை!
ஒடிசாவில் மாணவர் ஒருவர் தினமும் பள்ளிக்கு செல்வதில் பேருந்து நேரம் காரணமாக தாமதம் ஆகிறது என்று ட்விட்டரில் போட்ட பதிவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அம்மாநில போக்குவரத்துத்துறை சாய் அன்வேஸ்.
ஒடிசாவைச் சேர்ந்த மாணவன், பேருந்து மூலமாக தினமும் பள்ளிக்குச் சென்றுவரும் அம்மாணவனுக்கு, சரியான நேரத்தில் பேருந்து வராததால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதாவது, காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு 7.40 மணிக்கு செல்லவேண்டியுள்ளது.
இதனால் அவ்வப்போது ஆசிரியர்களிடம் பனிஷ்மேன்ட் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் சாய். ஆகவே, பேருந்து நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறி தனது கோரிக்கையை ட்விட்டர் வாயிலாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் புவனேஸ்வர் போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர், போத்ரா ஐபிஎஸ்-ஸையும் டேக் செய்திருக்கிறார்.
சாய் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“நான் புவனேஸ்வர் எம்பிஎஸ் பள்ளியில் படிக்கிறேன். லிங்கிப்பூரிலிருந்து வரும் என்னுடைய பேருந்து தாமதமாக வருவதால், நான் தினமும் பள்ளிக்கு தாமதமாக செல்கிறேன். இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன், பல சிக்கல்களைச் சந்திக்கிறேன், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என பதிவிட்டிருந்தார்.
அவர் பதிவிட்ட சிலமணி நேரங்களிலேயே உடனடியாக பதில் கிடைத்தது, மாணவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மாணவனின் பதிவுக்கு பதிலளித்துள்ள புவனேஸ்வர் போக்குவரத்துத் துறை நிர்வாக இயக்குநர் அருண் போத்ரா,
“உங்கள் பேருந்து நேரம் 7 மணியாக மாற்றப்பட்டுள்ளது, இனி நீங்கள் பள்ளிக்கு தாமதமாக செல்ல வேண்டாம்,” என தெரிவித்திருந்தார். இதைக் கண்டதும் மாணவன் சாய் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
மாணவரின் சிரமத்தை உணர்ந்து உடனடியாக பேருந்து நேரத்தை மாற்றிய புவனேஸ்வர் போக்குவரத்துத் துறைக்கு பாராட்டுகள் குவிகின்றன. அதேபோல, சம்யோஜிதமாக ட்விட்டரில் கோரிக்கை வைத்த மாணவனின் செயலையும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
கட்டுரை: Think Change India | தொகுப்பு: மலையரசு