‘3 ஆண்டுகளாக டென்டில் வசிக்கும் சிறுவன்’ - உன்னத நோக்கத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்!
சுற்றுலா செல்லும் போதும், விடுமுறை நாட்களில் வெளியே தங்கும் போதும், வனப்பகுதிகளில் கேப் அமைத்து தங்கும் போதும் டென்ட் எனப்படும் கூடாரங்களில் உறங்குவது வழக்கமானதாக உள்ளது. ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒரு உன்னதமான நோக்கத்திற்காக டென்ட்டில் நீண்ட நாட்கள் தங்கியிருந்துள்ளார்.
சுற்றுலா செல்லும் போதும், விடுமுறை நாட்களில் வெளியே தங்கும் போதும், வனப்பகுதிகளில் கேப் அமைத்து தங்கும் போதும் டென்ட் எனப்படும் கூடாரங்களில் உறங்குவது வழக்கமானதாக உள்ளது. ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒரு உன்னதமான நோக்கத்திற்காக டென்ட்டில் நீண்ட நாட்கள் தங்கியிருந்துள்ளார்.
'தி பாய் இன் தி டென்ட்' 'The boy in the tent' என்று பிரபலமாக அறியப்படும் மேக்ஸ் வூசி என்ற சிறுவன், முகாமிட்டு அதிக பணம் திரட்டியதற்காக உலக சாதனை படைத்துள்ளார்.
யார் இந்த மேக்ஸ் வூசி?
இங்கிலாந்தில் உள்ள டெவன் பகுதியைச் சேர்ந்த சிறுவன் மேக்ஸ் வூசி, தனக்கு 10 வயதாக இருந்த போது வீட்டிற்கு வெளியே டென்டில் வசிக்கத் தொடங்கினான். இந்த கேம்பைன் மூலமாக 7,50,000 பவுண்டுகள் அதாவது, இந்திய மதிப்பில் ரூ.7.6 கோடி நிதி திரட்டிய சிறுவன், அதனை அங்குள்ள தொண்டு நிறுவனமான நார்த் டெவன் ஹாஸ்பிஸுக்கு வழங்கியுள்ளார்.
சிறுவன் மேக்ஸ் வூசிவின் குடும்ப நண்பர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவரது உயிரைக் காப்பாற்ற நார்த் டெவன் ஹாஸ்பிஸ் தொண்டு நிறுவனம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறந்து போனார். அவர் இறப்பதற்கு முன்பாக தனது டென்ட்டை மேக்ஸிற்கு பரிசாக கொடுத்து, இதை வைத்து சாகசங்களை மேற்கொள்ள வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
“என் பக்கத்து வீட்டுக்காரர் புற்றுநோயால் இறப்பதற்கு முன், அவர் எனக்கு ஒரு கூடாரத்தைக் கொடுத்தார். இதை வைத்து சாகசத்தை மேற்கொள் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நார்த் டெவோன் ஹாஸ்பிஸ் அவரை மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டது, அவர்களுக்கு நன்றி சொல்ல நான் ஏதாவது செய்ய விரும்பினேன். இந்த இரண்டையும் செய்யவே எனது டென்ட் பிரச்சாரத்தை தொடங்கினேன்,” என்கிறார்.
வெறும் 10 வயதே ஆன சிறுவன் மேக்ஸின் மனதிற்குள் அவர் சொன்ன வார்த்தைகளும், அவருக்கு தொண்டு நிறுவனம் மேற்கொண்ட முயற்சியும் பசு மரத்து ஆணி போல் பதிந்து போனது. எனவே, தனது அங்கிளை காப்பாற்றப் போராடி அந்த தொண்டு நிறுவனத்திற்கு உதவும் விதமாக அவர் கொடுத்த டென்ட்டை வைத்தே மார்ச் 28, 2020 ’தி பாய் இன் தி டெண்ட்’ பிரச்சாரத்தை தொடங்கினார்.
கின்னஸ் சாதனை:
மேக்ஸ் தனது 10 வயதில் வீட்டின் தோட்டத்தில் தொடங்கிய பிரச்சாரம் 3 ஆண்டுகள் வரை நீண்டுள்ளது. அதன் பின்னர், ‘பாய் இன் தி டென்ட்’ பிரச்சாரம் நாடு முழுவதும் பிரபலமடைந்ததை அடுத்து, இங்கிலாந்தின் முக்கியமான பல்வேறு இடங்களிலும் டென்ட் அமைத்துக்கொள்ள மேக்ஸிற்கு அழைப்பு வந்துள்ளது.
ஐரோப்பிய யூனியனின் பிரதம மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லம், டவுனிங் தெருவில் உள்ள அவரது அலுவலகம், லண்டன் மிருகக்காட்சிசாலை, ஸ்ட்ரீட் தோட்டம், ட்விகன்ஹாம் ரக்பி மைதானம் ஆகியவற்றிலும் மேக்ஸ் டென்ட் அமைத்து இரவைக் கழித்துள்ளார்.
"எனது வாழ்க்கையின் சிறந்த மூன்று ஆண்டுகளை நான் பெற்றுள்ளேன். சில அற்புதமான மனிதர்களை நான் சந்தித்துள்ளேன் மற்றும் அற்புதமான அனுபவங்களைப் பெற்றுள்ளேன். நான் எதையும் மாற்றுவேன் என்று நான் நினைக்கவில்லை,” என்கிறார்.
டென்ட் அமைத்து தங்கிய 3 வருட காலங்களில் புயல், மழை, பனிப்பொழிவு, வெப்பம், கொரோனா போன்ற பல்வேறு பிரச்சனைகளை மேக்ஸ் எதிர்கொண்டுள்ளார். இருப்பினும், தனது முயற்சியைக் கைவிடாமல் 2022ம் ஆண்டு வரை போராடி $8,60,000 டாலர்கள் நிதி திரட்டி, நார்த் டெவன் ஹாஸ்பிஸ் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். இதன் மூலம் அந்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய செவிலியர்கள் சிலருக்கு வருடாந்திர சம்பளம் கொடுக்கும் முடியும்.
மேக்ஸ் இந்த பிரச்சாரத்தை தொடங்கிய 6 மாதத்திலேயே அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்ப வரும்படி அழைத்துள்ளனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதும், சிறுவனான மேக்ஸ் தனது லட்சியத்தில் உறுதியாக நின்று நிதி திரட்டியதோடு, உலக சாதனையும் படைத்து அசத்தியுள்ளார்.
13 வயதில் யூடியூப் ஸ்டார்: லட்சங்களில் சம்பாதிக்கும் டிஸ்லெக்சியா பாதித்த சிறுவன்!