Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

'சிறப்புவகை' உருளைக் கிழங்கு உற்பத்தியில் ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம் இவர் எப்படி ஈட்டுகிறார்?

'லேடி ரொசெட்டா' என்ற சிறப்பு வகை உருளைக்கிழங்கை பயிரிடுவதன் மூலம் தனது லாபத்தை உயர்த்தியுள்ளார் இந்த விவசாயி!

'சிறப்புவகை' உருளைக் கிழங்கு உற்பத்தியில் ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம் இவர் எப்படி ஈட்டுகிறார்?

Thursday April 09, 2020 , 2 min Read

நாட்டின்  ஏழை விவசாயிகள் அதிகம் உள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஜிதேஷ் படேல் ஒரு வித்தியாசமான உதாரணம் ஆவார். அவர் 'சிறப்புவகை உருளைக் கிழங்கு’ உற்பத்தியின் மூலம் ஆண்டுதோறும் 25 கோடி வருவாய் ஈட்டுகிறார்.

1

விவசாயமே இந்த நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படையாகும், ஆனால் இன்னும் விவசாயிகளின் நிலைமை நாட்டில் கவலைக்கிடமாக தான் உள்ளது. சில நேரங்களில் விவசாயிகள் பல காரணங்களால் திசைமாறிவிடுகிறார்கள், சில சமயங்களில் பயிருக்கு சரியான விலை கிடைக்காது. இவையெல்லாவற்றிற்கும் இடையில், விவசாயத்தின் தந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி கோடி ரூபாய் சம்பாதிக்கும் சில விவசாயிகளும் உள்ளனர்.

அகமதாபாத்தைச் சேர்ந்த ஜிதீஷ் படேல் ஒரு விவசாயி . ஜிதேஷ் படேல் உருளைக் கிழங்கு பயிரிடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.25 கோடி வருவாய் ஈட்டுகிறார். ஆரவள்ளி மாவட்டத்தில் உள்ள டோல்பூர் கம்பா கிராமத்தில் வசிப்பவர் ஜிதேஷ். 

வேளாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்ற ஜிதேஷ், 'லேடி ரொசெட்டா' என்ற சிறப்பு வகை உருளைக்கிழங்கை பயிரிடுவதன் மூலம் தனது லாபத்தை உயர்த்தியுள்ளார். 'லேடி ரோசெட்டா' உருளைக்கிழங்கை பொதுவாக நிறுவனங்கள் சிப்ஸ்கள் மற்றும் வேஃபர்கள் செய்யப் பயன்படுத்திகிறார்கள்.


விவசாயத்தில் ஜிதேஷுடன் தொடர்புடைய அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் விவசாயம் தொடர்பான பல்வேறு துறைகளில் நிபுணர்கள். ஜிதேஷின் கூற்றுப்படி, அவர் 2005 ஆம் ஆண்டில் விவசாயத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னரே விவசாயத்தை செய்யத் துவங்கினார். விவசாயம் பற்றி படித்ததன் காரணமாக, இந்த சிறப்பு வகை உருளைக்கிழங்கை வளர்க்க அவர் மிகவும் உதவிகரமாக இருந்தார்.


கடந்த 26 ஆண்டுகளாக ஜிதேஷின் குடும்பத்தினர் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்து வருகின்றனர். 2007 ஆம் ஆண்டில் ஜிதேஷ் முதன்முதலில் 'லேடி ரொசெட்டா' உருளைக்கிழங்கை 10 ஏக்கர் பண்ணையுடன் தொடங்கினார். பணி  அதிகப்படியாகும் போது, ​​ஜிதேஷின் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் அவருடன் சேர்ந்து அதே வேலையில் ஈடுபட்டனர்.


சந்தையில் 'லேடி ரொசெட்டா' உருளைக்கிழங்கிற்கான தேவை மிக அதிகம். பாலாஜி, ஐ.டி.சி போன்ற நிறுவனங்களுக்கு ஜிதேஷ் உருளைக்கிழங்கை விற்கிறார். இன்று ஜிதேஷ் 1000 ஏக்கரில் 'லேடி ரொசெட்டா' உருளைக்கிழங்கை மட்டுமே உற்பத்தி செய்கிறார்.