அதிக சம்பளம் வாங்கும் வங்கியாளர்கள் யார்? எவ்வளவு தெரியுமா? தரவுகள் வெளியீடு!
லிஸ்டில் யார் டாப்?!
தனியார் வங்கியில் இந்த நிதி ஆண்டில் அதிகம் வருமான ஈட்டிய வங்கியாளரின் விவரங்கள் வெளியாகியுள்ளது. எச்.டி.எஃப்.சி வங்கியின் ஆதித்யா பூரி தனியார் வங்கியின் அதிக வருமானம் ஈட்டிய வங்கியாளராக உருவெடுத்துள்ளார். அவர் ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா?
13.82 கோடி ரூபாய். இந்த மொத்த தொகையில் அவரின் ஓய்வுக்கு முந்தையை பண நலன்களும் அடங்கியுள்ளது. இதற்கிடையே, இவருக்கு அடுத்து இவரின் வாரிசு சஷித்ஹார் ஜக்திஷன் இந்த நிதியாண்டில் 4.77 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
அக்டோபர் 27, 2020 அன்று மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநரின் தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றவர் இந்த சஷித்ஹார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஐசிஐசிஐ வங்கியின் எம்டி மற்றும் சிஇஓ சந்தீப் பக்ஷி ரூ.38.38 லட்சம் ரூபாய் அளவு அலவன்ஸ் உள்ளிட்ட பண நலன்களை பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ICICI Prudential லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி இருந்து போனஸ் மூலமாக, ரூ.63.60 லட்சம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அதேநேரம் கொரோனா தொற்று காரணமாக சிஇஓ சந்தீப் பக்ஷி சம்பளத்தைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
ஆக்சிஸ் வங்கியின் சிஇஓ அமிதாப் சவுத்ரி இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவர் ரூ.6.52 கோடி ரூபாய் பெற்றுள்ளார் என வங்கியின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐசிஐசிஐவின் வருடாந்த அறிக்கையின்படி, அதன் நிர்வாக இயக்குனரான விஷகா முல்லே ரூ.5.64 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியைப் பொறுத்தவரையில், நிர்வாக இயக்குநர்கள், தலைமை நிதி அதிகாரி மற்றும் நிறுவன செயலாளர் உள்ளிட்ட பலர் தங்களின் ஊதியத்தை 10 சதவீதம் குறைவாக பெற்றுக்கொள்ள தானாக முன்வந்து தேர்வு செய்தனர்.
கொரோனா தாக்கம் காரணமாக, இந்தத் தேர்வை அவர்களாக முன்வந்து எடுத்ததனர். இதுமட்டும் இல்லையென்றால், அவர் இந்த லிஸ்டில் முன்னணியில் இருக்க வாய்ப்பிருந்திருக்கும். தரவின்படி, கோடிகளில் சம்பளம் பெற்ற வங்கியாளர்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.8.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களாக இருந்துள்ளனர்.
தகவல் உதவி- moneycontrol | தொகுப்பு: மலையரசு