Zomato இணை நிறுவனர் ராஜினாமா: ஏன்? என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
மளிகை பொருட்கள் விற்பனை நிறுத்தம்?!
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான zomato-வின் சமீபத்திய ஐபிஓ பல சாதனைகளை செய்தது. ஜோமோட்டோவை தொடர்ந்து பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், இப்போது ஐபிஓ நோக்கி படையெடுத்து வருகின்றன.
ஜோமாட்டோ பங்கு வர்த்தகம் கடந்த சில நாட்களாக சிறிய அளவிலான சரிவுகளை எதிர்கொண்டுவந்த நிலையில், தற்போது ஜோமோட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் கௌரவ் குப்தா ராஜினாமா விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. கௌரவ் குப்தா சில நாட்கள் முன் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் ஜோமோடோ நிறுவனத்தை விட்டும் வெளியேறினார்.
தனது ராஜினாமா குறித்து குப்தா ஜோமாட்டோ ஊழியர்களுடன் பகிர்ந்து அனுப்பியுள்ள மெயிலில்,
“நான் ஜோமாட்டோவை மிகவும் விரும்புகிறேன், எப்போதும் விரும்புவேன். 6 ஆண்டுகளுக்கும் முன் இங்கு வந்தேன். ஒரு அற்புதமான பயணத்தை கடந்து வந்துள்ளேன். இப்போது நாம் இருக்கும் இடத்தைக் கண்டு பெருமிதம் அடைகிறேன். இதை அடைய நாம் எத்தனை விஷயங்களைக் கடக்க வேண்டியிருந்தது என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. வருங்காலத்தில் இன்னும் பலவற்றை சாதிப்போம்,” என்று எழுதியுள்ளார்.
2015ல் தான் ஜோமோட்டோ உடன் இணைந்தார் கௌரவ் குப்தா. அப்போது டேபிள் ரிசர்வேஷன் பிரிவின் தலைவராக இணைந்தவர் குறுகிய காலத்தில் வளர்ச்சி கண்டார். குறிப்பாக, முதலீட்டை ஈர்ப்பதற்காக 2019ல் ஜோமோட்டோவின் துணை நிறுவனர் என்ற அளவுக்கு உயர்ந்தார் கௌரவ்.
பின்பு, நியூராகியூட்டிகல் வர்த்தகத்தைத் தலைமை பொறுப்பேற்று நடத்தி வந்தார். விரைவாக ஜோமோட்டோவின் தலைமை செயல் அதிகாரியாக பதவியுயர்வு பெற கவனம்பெற்றார். இந்த காலகட்டத்தில் ஜோமோட்டோ ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்ததார் கௌரவ்.
இந்த நிலையில் தான் தற்போது இவர் ராஜினாமா முடிவை எடுத்துள்ளார். அதுவும் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட்டு 2 மாதத்திலேயே ராஜினாமா செய்துள்ளது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஜோமோட்டோ குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
அதற்கேற்ப, குப்தா ராஜினாமா செய்திகள் வெளியான சில மணிநேரத்தில் ஜோமோட்டோ பங்குகள் சில தடுமாற்றங்களைக் கண்டது. என்றாலும், அடுத்த சில மணிநேரத்தில் பங்குகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பின. வர்த்தக முடிவில் ஜோமோட்டோ பங்குகள் 0.84 சதவீதம் உயர்ந்து 144.40 ரூபாய் என்ற அளவில் இருந்தது.
ஜோமோட்டோ நிறுவனரான தீபேந்தர் கோயல் கௌரவ் குப்தா வெளியேற்றம் குறித்து பேசுகையில்,
”கௌரவ் வெளியேறிய பின் ஜோமோட்டோ புதிய பாதையில் பயணிக்க இருக்கிறது. நானும் இதேபோல் வெளியேறினாலும் ஜோமோட்டோ தனது வர்த்தகத்தை தொடர்ந்து நடத்தவும், அதனை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவும் எங்களிடம் சிறப்பான அணி இருக்கிறது," என்றுள்ளார்.
இதனிடையே, கௌரவ் குப்தா வெளியேறுவது குறித்து வருத்தத்துடன் தீபேந்தர் கோயல் டுவீட் வெளியிட்டதும், அதற்கு குப்தா பதில் கொடுத்ததும் ஜோமோட்டோ ஊழியர்களைத் தாண்டி வரவேற்பை பெற்றது.
மளிகைப் பொருட்கள் விற்பனை நிறுத்தம்!
ஜோமோட்டோ நிறுவனத்தில் மற்றொரு அடியாக, அந்நிறுவனம் மளிகைப் பொருட்கள் விற்பனை திட்டத்தில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. கடந்த இரண்டு வருடத்தில் ஜோமோட்டோ பின்வாங்குவது இது இரண்டாம் முறையாகும்.
ஆங்கிலத்தில்: ராஷி | தமிழில்: மலையரசு