அன்லிமிடட் இலவச உணவு டெலிவரி: வாடிக்கையாளர்களைக் கவர Zomato புதிய திட்டம்!
அனைத்து டெலிவரிகளும் இலவசம்!
பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Zomato வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு வகையான ஆபர்களை வழங்கி வருகிறது. ஜோமாட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், நேற்று வாடிக்கையாளர்களைக் கவரும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அது ’ப்ரோ பிளஸ் மெம்பர்ஷிப்'.
இந்த ப்ரோ பிளஸ் மெம்பர்ஷிப் திட்டத்தில் இணையும் ஜோமாட்டோ வாடிக்கையாளர்கள், இனி தாங்கள் செய்யும் ஆர்டர்களுக்கு கூடுதல் கட்டணங்கள் மற்றும் தொலைதூர கட்டணம் இல்லாமல் வரம்பற்ற இலவச டெலிவரிகளை பெற்றுக்கொள்ள முடியும். இந்தத் திட்டத்தை அறிவித்த தீபிந்தர் கோயல், வாடிக்கையாளர்களை ‘ப்ரோ பிளஸ் மெம்பர்ஷிப்'பில் இணையை அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்ட டுவீட்டில்,
"இன்றைய நிலவரப்படி ஜோமாட்டோ 1.8 மில்லியன் ப்ரோ உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து மிகவும் கோரப்பட்ட அம்சங்களில் ஒன்று, ‘அனலிமிடெட்’ (அமேசான் பிரைம் உள்ளது போன்றது). எனவே, சில மணிநேரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக எங்கள் லிமிடெட் எடிஷன் *ப்ரோ பிளஸ்* மெம்பர்ஷிப்பை அறிமுகப்படுத்துகிறோம்..." என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த ப்ரோ ’பிளஸ் மெம்பர்ஷிப்' invite-only வகையிலானது. அதாவது, உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு மட்டுமே இதில் இணைய முடியும். இவர்களுடன் அனைத்து Zomato பதிப்பு பிளாக் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களும் தானாகவே Zomato Pro Plusக்கு மேம்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலவச டெலிவரிகள் மூலம், டெலிவரி பார்ட்னர்கள் அல்லது ரைடர்ஸ் வருமானத்தை இழக்க நேரிட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், இதற்கு பதிலளித்த தீபிந்தர், டெலிவரி பார்ட்னர்களுக்கான ஊதியச் செலவை ஜோமாட்டோ நிறுவனம் ஏற்கும் என்று தெளிவுப்படுத்தினார்.
ஜோமாட்டோ தனது உறுப்பினர் சலுகையை ‘ஜோமோட்டோ கோல்டில்' இருந்து ’ஜோமோட்டோ ப்ரோ' என்று ஜூன் 2020ல் மறுபெயரிட்டது. உறுப்பினர் முன்னுரிமை டெலிவரி மற்றும் ஆர்டரில் தள்ளுபடிகள் மற்றும் ஒரு சில டைன்-இன் நன்மைகளுக்காக இதனை அறிமுகம் செய்ததது.
இந்தத் திட்டங்கள் கொரோனா நெருக்கடியால் மேஜர் ஆர்டர்கள் மற்றும் பயனர்களின் எண்ணிக்கையில் பெரிய உயர்வைக் கண்டது. இதனால் அதிலிருந்து ஜோமாட்டோ லாபத்தையும் பெற்றுள்ளது என்றும் தீபிந்தர் கூறினார். கடந்த நான்கு காலாண்டுகளில் இருந்து அதன் உணவு விநியோக வணிகம் நேர்மறையாக இருந்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.
ஜோமாட்டோ நிறுவனம் சமீபத்தில்தான் இந்தியாவின் முதல் தொழில்நுட்ப யூனிகார்ன் ஆனது. ஜூலை 23 அன்று, ஜோமோட்டோ என்எஸ்இ-ல் (பங்குசந்தை) ஒரு பங்க்கை ரூ.116 என்ற விலையில் விற்றது. பின்னர் ரூ.125 என்று இருந்த பங்கு முடிவதற்கு முன்பாக ரூ.138 என்ற நிலைக்கு வேகமாக உயர்ந்தது.
மேலும், முதல் நாளில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டி பங்கு விலையில் 66 சதவிகித உயர்வுடன், மற்றும் சந்தை மூலதனம் ரூ.98,000 கோடிக்கு மேல் (சுமார் $ 13 பில்லியன்) இருந்தது.
ஆங்கிலத்தில்: ராஷி | தமிழில்: மலையரசு