ஓலாவில் 10% பணி நீக்கம்; சி.இ.ஓ. ஹேமந்த் பக்ஷி ராஜினாமாவா?
முன்னதாக ஹேமந்த் பக்ஷி மார்க்கெட்பிளேசின் துணைத்தலைவராகவும் இந்தோனேசியா யூனிலிவரின் தலைவராகவும் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம்தான் ஹேமந்த் ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் பக்க்ஷி, நிறுவனத்தில் இருந்து உடனடியாக விலகவுள்ளதாக செய்தி அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
முன்னதாக ஹேமந்த் பக்ஷி மார்க்கெட்பிளேசின் துணைத்தலைவராகவும் இந்தோனேசியா யூனிலிவரின் தலைவராகவும் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம்தான் ஹேமந்த் ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
நிறுவனத்தின் முதல் பங்கு வெளியீடு தொடர்பாக நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெறுவதன் பின்னணியில் ஹேமந்த் பக்ஷியின் ராஜினாமா செய்தி வந்துள்ளது என்று மணி கண்ட்ரோல் வணிகச் செய்தி ஊடகம் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ஹேமந்தின் விலகல் 10% பணி நீக்கங்களுக்கும் வழிவகுக்கும் என்று அதே செய்தி கூறுகிறது. ஏ.என்.ஐ. டெக்னாலஜீஸ் நிறுவனர் பாவிஷ் அகர்வால் ஓலாவின் தினசரி தினசரி செயல்பாடுகளை கவனிப்பார் என்றும், "விரைவில் புதிய சி.இ.ஓ.நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.
யுவர்ஸ்டோரி இது தொடர்பாக கேட்க ஓலா உடனடியாக பதிலளிக்கவில்லை, மேலும், யுவர்ஸ்டோரியால் மனிகண்ட்ரோல் ஊடகத்தின் இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹேமந்த் பக்ஷி சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஓலா கேப்ஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களுடன் உரையாடினர். அப்போது அவரும் அகர்வாலும் நிறுவனத்தின் கேப்ஸ் பிரிவில் மறுசீரமைப்பை அறிவித்தனர். இருவரும், ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டு, ஓலாவின் பைக் டாக்சி செயல்பாடுகளைப் பற்றி பேசினர்.
சமீபத்தில் ‘முன்னுரிமைகளை மறு மதிப்பாக்கம் செய்வதாகக் கூறி இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டின் சவாரி சேவைகளை நிறுத்துவதாக அறிவித்தது.
மேலும், கடந்த 12 மாதங்களாக ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் முதலீட்டுப் பின்னணியில் இருந்த வான்கார்ட் ஓலாவில் தன்னுடைய பங்கை தொடர்ந்து சீரான முறையில் மதிப்புக் குறைப்பு செய்து கொண்டே வந்தது. அதாவது, பிப்ரவரி 2024 இல், அதன் மதிப்பீட்டை $2.65 பில்லியனில் இருந்து $1.88 பில்லியனாகக் குறைத்தது.
முன்னதாக ஆகஸ்ட் 2023-ல் ஓலாவில் தன்னுடைய பங்கை 50%க்கும் கூடுதலாக மதிப்பு நீக்கம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.