இது வேலை செய்யற இடம்... இங்கு அரசியலுக்கு வேலை இல்லை - கூகுள் ஊழியர்களிடம் சுந்தர் பிச்சை கண்டிப்பு!
கூகுள் ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களாகவே சிக்கல்கள் அதிகரித்துள்ளன. கூகுள் நிறுவனம் இஸ்ரேலுடன் நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்த்துப் போராடிய ஊழியர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இது நடந்து ஒரு நாள் சென்று 28 ஊழியர்கள் இதே காரணத்துக்காக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கூகுள் ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களாகவே சிக்கல்கள் அதிகரித்துள்ளன. கூகுள் நிறுவனம் இஸ்ரேலுடன் நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்த்துப் போராடிய ஊழியர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இது நடந்து ஒரு நாள் சென்று 28 ஊழியர்கள் இதே காரணத்துக்காக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, கூகுள் ஊழியர்களிடத்தில் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை கண்டிப்பான மெசேஜை அனுப்ப நேரிட்டுள்ளது.
சுந்தர் பிச்சை தன் வலைப்பதிவில் ஊழியர்களுக்குக் கூறிய கண்டிப்பு தொனியிலான அறிவுரையில்,
‘நாம் வேலையில் கவனம் செலுத்துவோம். வேலையில் நாம் எப்படி ஒன்றிணைகிறோம், விவாதிக்கிறோம்... ஏன் மாற்றுக்கருத்துக்களைக் கூட பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் நல்லது,’ என்று கூறியுள்ளார்.
“கூகுள் நிறுவனத்தில் ஆக்கப்பூர்வமான, திறந்த விவாதம் என்னும் கலாச்சாரம் நிலவுகிறது, இத்தகைய கலாச்சாரம்தான் பிரமாதமான பயன்பாடுகளை உருவாக்க முடிந்துள்ளது, மேலும் பெரிய யோசனைகளை செயல்பாடாக மாற்ற முடிந்துள்ளது. எது எப்படியிருந்தாலும் இது பணியாற்றுவதற்கான இடம் நமது கொள்கைகளும் எதிர்பார்ப்புகளும் தெளிவானவை.
இது வர்த்தகம், இங்கு சகபணியாளர்களை இடையூறு செய்யுமாறும் அவர்கள் பாதுகாப்பற்ற வகையில் உணருமாறும் செயல்படுவது கூகுள் கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல. பணியிடத்தை சொந்த விவகாரங்களுக்கான இடமாகவோ, இடையூறு தரும் விவகாரங்களுக்கான விவாதக் களமாகவோ, அரசியலை விவாதிக்கும் இடமாகவோ மாற்றுவது கூடாது,” என்று கண்டிப்பான மெசேஜை வெளியிட்டுள்ளார்.
சுந்தர் பிச்சையின் இந்த எச்சரிக்கைப் பதிவுக்கு முன்னதாக நிறுவனத்தின் செக்யூரிட்டி தலைமை கிறிஸ் ராக்கோ ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை செய்தியை அனுப்பினார். அதாவது,
பணியிடத்தில் ஊழியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையோனோர் சரியாக நடந்து கொள்கின்றனர். நடத்தை விதிகளை மீறும் ஒருசிலரில் நீங்கள் ஒருவராக இருப்பீர்களானால் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள் என்று கண்டிப்புடன் எச்சரித்திருந்தார்.
கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை மேலும் தனது பதிவில்,
“நாம் பணிக்கு வரும்போது, உலகின் தகவல்களை ஒழுங்கமைத்து, அதை உலகளவில் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதே குறிக்கோள் என்ற நோக்கத்துடன் வந்தோம், இந்த நோக்கம் மற்றவைகளை விட முக்கியமானது, மேலானது. இந்த நோக்கத்தைப் பிரதிபலிக்கும் கவனத்துடன் நாம் செயல்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என்று கூறியுள்ளார்.