Stock News: பங்குச்சந்தை இன்று உயர்வு: சென்செக்ஸ், நிப்டி பாசிட்டிவ்!
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன் கிழமையன்று (24-04-2024) உயர்வுடன் தொடங்கியுள்ளது. கடந்த வார சரிவு நிலைகளுக்குப் பிறகு மூன்றாவது நாளாக இன்றும் உயர்வுடன் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன் கிழமையன்று (24-04-2024) உயர்வுடன் தொடங்கியுள்ளது. கடந்த வார சரிவு நிலைகளுக்குப் பிறகு மூன்றாவது நாளாக இன்றும் உயர்வுடன் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.இ. சென்செக்ஸ் குறியீடு தொடக்க நிலவரப்படி 206 புள்ளிகள் உயர்வடைந்து 73,944 புள்ளிகளுடன் இருந்தது. அதே போல் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 46 புள்ளிகள் உயர்வு கண்டு 22,414 புள்ளிகளுடன் உள்ளது.
இதோடு மட்டுமல்லாமல் நிப்டி பேங்க் குறியீடு 232 புள்ளிகள் உயர்ந்து 48,203 புள்ளிகளுடன் உள்ளது. நிப்டி ஐடி குறியீடு சற்றே பின்னடைவு கண்டுள்ளது. மும்பைப் பங்குச் சந்தையின் பிஎஸ்இ ஸ்மால் கேப் 365 புள்ளிகள் உயர்ந்து 46,857 புள்ளிகளுடன் உள்ளது.
உயர்வுக்கான காரணங்கள்:
உலகின் பிற பங்குச் சந்தைகளும் உயர்வான தொடக்கம் கண்டுள்ளமை இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பாசிட்டிவ் ஆக தாக்கம் செலுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கப் பங்குச் சந்தை நேற்று உயர்வு நிலையில் நிறைவுற்றதும் இதனையடுத்த ஆசியப் பங்குச் சந்தைகள் நிலவரமும் பாசிட்டிவ் ஆக இருப்பதால் மும்பைப் பங்குச் சந்தைகள் உயர்வு நிலை கடைப்பிடித்து வருகிறது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
பார்தி ஏர்டெல்
டாடா ஸ்டீல்
என்.டி.பி.சி.
இறக்கம் கண்ட பங்குகள்:
எம்.சி.எக்ஸ் இந்தியா
வோடபோன் ஐடியா
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே கூடி இன்று ரூ. 83.27 ஆக உள்ளது.