Stock News: பங்குச்சந்தை சரிவு கண்டு பிறகு சற்றே மீண்டது!
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையன்று (25-04-2024) 200 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி பிறகு சற்றே மீண்டுள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையன்று (25-04-2024) 200 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி பிறகு சற்றே மீண்டுள்ளது. கடந்த வார சரிவு நிலைகளுக்குப் பிறகு மூன்று நாளாக உயர்வுடன் தொடங்கி பிறகு இன்று சற்றே சரிவுடன் தொடங்கி பிறகு மீண்டுள்ளது.
பி.எஸ்.இ. சென்செக்ஸ் குறியீடு தொடக்க நிலவரப்படி, 158.84 புள்ளிகள் உயர்வடைந்து 74,011.78 புள்ளிகளுடன் இருந்தது. அதே போல், தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 40.50 புள்ளிகள் உயர்வு கண்டு 22,442.90 புள்ளிகளுடன் உள்ளது.
இதோடு மட்டுமல்லாமல் நிப்டி பேங்க் குறியீடு 81.25 புள்ளிகள் உயர்ந்து 48,270.25 புள்ளிகளுடன் உள்ளது. நிப்டி ஐடி குறியீடு சற்றே உயர்வு கண்டுள்ளது. மும்பைப் பங்குச் சந்தையின் பிஎஸ்இ ஸ்மால் கேப் 178 புள்ளிகள் உயர்ந்து 47,036 புள்ளிகளுடன் உள்ளது.
உயர்வுக்கான காரணங்கள்:
சந்தை தொடக்கத்தில் சற்றே பின்னடைவு கண்டதற்குக் காரணம் உலக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளதைக் காட்டுகிறது. ஏனெனில் மெட்டா பங்குகள் சரிவு கண்டதும் காரணமாகக் கூறப்படுகின்றன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஆக்சிஸ் வங்கி
கொச்சின் ஷிப்யார்டு
மாசகான் டாக்
இறக்கம் கண்ட பங்குகள்:
கோட்டக் மகீந்திரா
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே குறைந்து இன்று ரூ. 83.38 ஆக உள்ளது.