Stock News: பங்குச்சந்தை உயர்வு; சென்செக்ஸ் 74,000-த்தைக் கடந்தது...
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க் கிழமையன்று (23-04-2024) உயர்வுடன் தொடங்கியுள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமையன்று (23-04-2024) உயர்வுடன் தொடங்கியுள்ளது. கடந்த வார சரிவு நிலைகளுக்குப் பிறகு இரண்டாவது நாளாக இன்றும் உயர்வுடன் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.இ. சென்செக்ஸ் குறியீடு தொடக்க நிலவரப்படி, 286 புள்ளிகள் உயர்வடைந்து 73,932 புள்ளிகளுடன் இருந்தது. அதே போல், தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 82 புள்ளிகள் உயர்வு கண்டு 22,418 புள்ளிகளுடன் உள்ளது. இதோடு மட்டுமல்லாமல் நிப்டி பேங்க் குறியீடுகளும் சற்றே உயர்வுடன் உள்ளது. மும்பைப் பங்குச் சந்தையின் பிஎஸ்இ ஸ்மால் கேப் மற்றும் நிப்டி தகவல் தொழில்நுட்பக் குறியீடுகள் உயர்வுடன் தொடங்கி முதலீட்டாளர்களுக்குச் சாதக சூழ்நிலையில் உள்ளன.
உயர்வுக்கான காரணங்கள்: உலகின் பிற பங்குச் சந்தைகளும் உயர்வான தொடக்கம் கண்டுள்ளமை இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பாசிட்டிவ் ஆக தாக்கம் செலுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பதற்றம் தணிவுற்றதால் முதலீட்டாளர்கள் ஊக்கம் பெற்றுள்ளனர்.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
வோடஃபோன்
தேஜஸ் நெட்வொர்க்
ஜியோ பைனான்சியல்
பார்தி ஏர்டெல்
டாடா மோட்டார்ஸ்
டைட்டன்
சன் பார்மா
இறக்கம் கண்ட பங்குகள்:
நெஸ்லே இந்தியா
அதானி எண்டர்பிரைசஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே கூடி இன்று ரூ. 83.33 ஆக உள்ளது.