தமிழக அரசின் சிறப்பு மையங்களுடன் ஒப்பந்தம் செய்ய 25 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆர்வம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துள்ள சிறப்பு மையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட 25 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துள்ள சிறப்பு மையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட 25 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் (StartupTN) மற்றும் இன்னோவேஷன் மிஷன் கூட்டு முயற்சியான 'ஒளிர்' புத்தாக்கத் தொழில் நிறுவனங்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை சென்னை டைட்டில் பார்க்கில் நடைபெற்றது.
இதில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், Startup TN மிஷன் இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேம்பட்ட உற்பத்தி, ரோபோட்டிக்ஸ், இ-காமர்ஸ், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, விவசாயத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 250 தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEOs) பங்கேற்றனர்.
தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (TANCAM), தமிழ்நாடு நுண்திறன் மற்றும் மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (TANSAM). தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (TAMCOE) ஆகிய மூன்று திறன்மிகு மையங்களை கடந்த ஆண்டு டைட்டில் பார்க்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த சிறப்பு நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களுக்கு அவற்றின் வடிவமைப்பு, முன்மாதிரி மற்றும் மேம்பாடு சோதனையை விரைவுபடுத்துவதற்கான அறிவை வழங்குகின்றன.
தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ் கிருஷ்ணன் கூறுகையில்,
“அரசுத் துறைகளுக்குள் உள்ள உள் இணைப்பும், தனியார் துறையுடனான தொடர்பும், 'ஒளிர்' போன்ற முயற்சிகளால் மேம்படுத்தப்பட்டு, அனைத்து பங்குதாரர்களுக்கும் சிறந்த பலன்களை முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது,” எனக்கூறினார்.
StartupTN மூலம் மாநில அரசின் பல்வேறு முயற்சிகள் தமிழகத்தை உலகளாவிய ஸ்டார்ட்அப் இலக்காக மாற்றும் என அதன் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டில் புத்தாக்க மையங்களின் தொழில் சூழல் மேம்படுத்துவதற்கும் புத்தாக்க மையத்தின் மையப்புள்ளியாக மாற்றவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு புதுமையான முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும், இந்த 'ஒளிர்' நிகழ்விற்கு புத்தாக்க மையங்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. புத்தாக்க மையங்கள் திறன்மிகு மையங்களை பார்வையிட வேண்டிய அவசியம் என்ன என்பதையும் எடுத்துரைத்தார்.”
டிட்கோவின் நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன்,
“தமிழ்நாடு, தொழில்துறையின் தலைமை நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த புத்தாக்க நிறுவனங்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு மாற்றாக, தொழில்முனைப்போடு புதிய புத்தாக்க மையங்களை அமைப்பதற்கு அழைப்பு விடுத்தார்.”
இந்நிகழ்வின்போது 25 புத்தாக்க மையங்கள் டிட்கோவின் திறன்மிகு மையங்களுடன் அவற்றின் வசதிகளை பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoUs) மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன.

