‘ஏஐ நுட்பத்தை செயல்திறன், பலன்கள் கொண்டு மதிப்பிட வேண்டும்’ - சத்யா நாதெள்ளா
ஏஐ நுட்பத்திற்கு எதிரான அலையை சமாளிக்க முடியும் என்றும், நன்கு வழிநடத்தப்பட்டால் ஏஐ; ஊதியத்தை அதிகரித்து பரவலான பலன் அளிக்கும் என்கிறார் சத்யா நாதெள்ளா.
சத்ய நாதெள்ளா, செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ மிக மோசமாக முடிவடையும் எனும் கருத்தை எதிர்க்கிறார். ஏஐ எதிர்ப்பு உண்மையாக இருந்தாலும் அதன் முன்னேற்றத்தை நிறுத்த எந்த காரணமும் இல்லை, என்கிறார்.
சான்பிரான்சிஸ்கோவில் நேரடி உரையாடலில் பங்கேற்றவர் பொதுமக்கள் மத்தியில் ஏஐ தொடர்பாக உள்ள அவநம்பிக்கை மற்றும் பணியிழப்புகளை ஒப்புக்கொண்டாலும், நன்கு நிர்வகிக்கப்படும் ஏஐ நுட்பம் செயல்திறனை மேம்படுத்தி, ஊதியத்தை உயர்த்தி, பரவலாக செழிப்பை கொண்டு வரும் என்றார்.

எதிர்ப்பு அலை இருந்தாலும்..
மிகைத் தன்மையை விட பலன்கள் முக்கியம் என அவர் வாதிடுகிறார். ஏஐ என்பது மக்கள் வேகமாகவும், செயல்திறனுடனும், மேலும் அதிகம் சம்பாதிக்கவும் உதவுகிறதா எனும் அடிப்படையில் சீர் தூக்கிப்பார்க்க வேண்டிய பொது தொழில்நுட்பம் என்கிறார். ஏஐ எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது, என்று கூறுவதோடு, பலன்கள் குவிந்து கிடக்காமல் பரவலாக வேண்டும், என்கிறார்.
பலன்கள் பகிர்தல்
ஏஐ திறன்களை பொது வளமாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக வாஷிங்டன்னில் மேற்கொள்ளப்படும் முயற்சி பற்றி குறிப்பிட்டவர், ஏஐ நிறுவனங்கள் உருவாக்கும் செல்வ வளத்தில் மக்கள் பங்கேற்பதில் தனக்கு எதிர்ப்பு இல்லை, என்றார். மக்களுக்கு பலன் அளிக்கும் அம்சத்துடன் புதுமையாக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது அரசுக்கான அவரது கோரிக்கையாக உள்ளது. இது ஏஐ தொடர்பான கவலைகளை குறைக்கும்.
அரசியல், தரவு மையங்கள்
அமெரிக்கா முழுவதும், பெற்றோர் குழுக்கள், ஆன்மிக தலைவர்கள், சுற்றுச்சூழல்வாதிகள் ஆகியோர் மத்தியில் வேலையிழப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் மனநலன் தொடர்பாக அச்சம் இருப்பதை அவர் அலட்சியம் செய்யவில்லை.
மாறாக, இது வெளிப்படையான அமைப்பு, வலுவான பாதுகாப்பு அம்சங்கள், தீர்மானமான பொது பலன்கள், தரவு மையங்களை பொறுப்பாக அமைப்பது, உலக நன்மைகளை அளவிடுவது ஆகிய அம்சங்களை உணர்த்துவதாக கருதுகிறார்.
மைக்ரோசாப்ட் ஏஐ உத்தி
மைக்ரோசாப்டின் ஏஐ உத்தி, லட்சியம் மற்றும் கட்டுப்பாடு கலந்ததாக இருக்கிறது. நிறுவனம் ஓபன் ஏஐ நிறுவனத்தில் 2019ல் முதலீடு செய்து பின்னர் இதை விரிவாக்கியது. மேலும், அறிவுசார் ஒப்பந்தம் தொடர்பாக ஒப்பந்தத்தை மறு சீரமைப்பும் செய்தது.
வாடிக்கையாளர்களிடையே அரிதான கம்ப்யூட்டிங் வளத்தை கவனமாக பகிர்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். செமிகண்டக்டர் மற்றும் நினைவுத்திறன் இன்னமும் முக்கியமாக அமைகின்றன என்றார்.
இதன் தாக்கம் என்ன?
அரசுகளை பொருத்தவரை, பாதுகாப்பு அம்சங்களை ஏஐ ஏற்பிற்கு வழி வகுத்து பலன்கள் பகிரப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நிறுவனங்கள், பயன்பாட்டை வேகமாக நிருபித்து, பொறுப்பாக செயல்பட வேண்டும். ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து, மிச்சமாகும் நேரம், வாடிக்கையாளர் திருப்தி அகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
ஊழியர்களை பொருத்தவரை, துறைசார் அறிவுடன் ஏஐ திறன் பெற வேண்டும். மிக மோசமான முடிவு தொடர்பான அச்சத்திற்கு மாற்று நடைமுறை சார்ந்த முன்னேற்றம், பொறுப்பேற்பு மற்றும் அனைவருக்குமான பலனாகும்.
நியூக்ளியஸ் ஏஐ
Edited by Induja Raghunathan

