ஒரு மாநிலத்தால் என்ன சாதிக்கமுடியும்? - சரித்திரத்தை மாற்றி எழுதும் ஆந்திர பிரதேசம்!
பொருளாதார வல்லுனர் மசுகாட்டோ முன்வைக்கும் தொழில்முனைவு அரசு கருத்தாக்கத்தை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் ஆந்திர பிரதேச மாநிலம், தொழில்முனைவை பொது உள்கட்டமைப்பாக மாற்றி வருகிறது.
முப்பது ஆண்டுகளாக, இந்திய மாநிலங்கள் எல்லாமே நன்கறியப்பட்ட உத்திகளையே பின்பற்றி வந்துள்ளன. ஆலைகளை ஈர்ப்பது, முதலீடு உறுதிகளை அறிவிப்பது, தொழில் பூங்காக்கள் அமைப்பது, வேலைவாய்ப்பு உருவாக்குவது, என இவை அமைகின்றன.
ஆனால், உலகம் முழுவதும் பாரம்பரிய வேலைவாய்ப்புகள், நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. ஏஐ, தானியங்கிமயம், மாறிவரும் வர்த்தக மாதிரிகள் ஆகியவை குறைந்த ஊழியர்கள் கொண்டு அதிக உற்பத்தியை காண முடிகிறது. நவீன தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்தாலும், முந்தைய ஆண்டுகளை விட பணி நியமனங்கள் மெதுவாகவே நிகழ்கின்றன. உற்பத்தி துறை சீராக தானியங்கி மயமாகி வருகிறது.

இந்த நெருக்கடி இளமையான நாடுகளில் அதிகம் உள்ளது. அதன்படி பார்த்தால், இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு கோடி பேர் பணி சூழலில் நுழைகின்றனர். அதே நேரத்தில், நாட்டின் கல்லூரிகள் 4.5 கோடி மாணவர்களை ஆண்டுதோறும் பதிவு செய்கிறது, என உயர் கல்வி தொடர்பான அகில இந்திய சர்வே ஒன்று தெரிவிக்கிறது. பெரிய நிறுவனங்களால் மட்டுமே இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க முடியவில்லை எனில் நாளைய வேலைகள் எங்கிருந்து வரும்?
இது அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது: மாநிலங்கள் வேலைவாய்ப்பை மட்டும் உருவாக்காமல், தொழில்முனைவோர்களை உருவாக்குவது எப்படி? எனும் கேள்வி. ஏனெனில், நிறுவனங்கள் வேலை அளிக்கின்றன என்றால் தொழில்முனைவோர் நிறுவனங்களை உருவாக்குகின்றனர். ஒவ்வொரு வெற்றிகரமான ஸ்டார்ட் அப்’பும் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களாக உருவாகும் வாய்ப்பு கொண்டுள்ளன. இவை புதிய தொழில்களை, சப்ளை செயின்கள, வாய்ப்புகளை உருவாக்கக் கூடியவை. அரசால் மட்டுமே இவற்றை உருவாக்க முடியாது.
இந்தியாவின் மிகுந்த லட்சியம் மிக்க அரசு வழிநடத்தும் தொழில்முனைவோர் உருவாக்க உத்திகள் மூலம் அந்திர மாநிலம் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முயல்கிறது. மாநில தேர்தலில் ’தெலுங்கு தேசம்’ மற்றும் பவன் கல்யாணின் ’ஜன சேனா கட்சி’, ’பாஜக’ இணைந்த தேசிய ஜனநாய கூட்டணி 2024ல் ஆட்சியை பிடித்த போது, வேலைவாய்ப்பு பசி கொண்ட இளமையான மாநிலத்தின் ஆட்சிக்கு வந்தது.
ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில், முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நர லோகேஷ், தொழில்முனைவே பொது உள்கட்டமைப்பாக அமையும் சூழலான நிறுவனர் பொருளாதாரத்தை உருவாக்கி வருகின்றனர்.
பொருளாதார வல்லுனர் மரியானா மசுகாட்டோ தனது தொழில்முனைவு தேசம் புத்தகத்தில், ஆய்வுகளுக்கு நிதி அளிப்பதன் மூலம் அரசாங்கங்கள் தனியார் துறையால் முடியா புதுமையாக்க இடர்களை எதிர்கொண்டு, நிறுவனங்கள் வருவதற்கு முன் சந்தையை வடிவமைக்க முடியும், என குறிப்பிடுகிறார்.
இந்த எண்ணத்தை ஆந்திர மாநிலம் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறது. புதுமையாக்கத்தை ஆதரிப்பதோடு நில்லாமல், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான நிறுவனர்கள் உருவாவதை ஊக்குவிக்கும் வகையில் தொழில்முனைவை பொது உள்கட்டமைப்பாக கருதுகிறது.
வழக்கமான தொழில் கொள்கையில் இருந்து இது வேறுபட்டது. தொழில் முதலீடு இன்றைக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிலையில், நிறுவனர் சார்ந்த பொருளாதாரம் பல ஆண்டுகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. தொழில்நுட்ப தாக்கம் கொண்ட காலத்தில் இது மிகவும் முக்கியம்.
தொழில் கொள்கையில் இருந்து தொழில்முனைவு கொள்கை
பெரும்பாலான மாநில பொருளாதாரங்கள் நிறுவனங்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன. ஆனால், ஆந்திரா மாநிலத்திற்குள் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உருவாகும் சூழலை உண்டாக்கி வருகிறது. அரசு கொள்கைகள் எளிமையான யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
அரசால் மட்டுமே லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியாது, எத்தனை முயன்றாலும் அரசு பணிகளில் குறிப்பிட்ட அளவே பணிக்கு சேர்க்க முடியும். இந்தியாவின் இளம் மக்கள் தொகைக்கு, பெரும் நிறுவனங்களால் மட்டுமே வேலை அளிக்க முடியாது. தொழில்முனைவோர்களால் மட்டுமே தொடர்ச்சியாக வர்த்தகத்தை உருவாக்கி புதிய வேலைவாய்ப்புகளை அளிக்க முடியும்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து மற்றும் நீண்ட கால தொழில்முனைவு ஆற்றலுக்கான முதலீடுகள் அறிவிப்புகளை மையமாகக் கொண்ட கொள்கை அணுகுமுறையில் இருந்து இது மாறுபடுகிறது. ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் ஆந்திர பிரதேசம் புதுமையாக்க கழகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டுள்ள தொழில்முனைவு வல்லுனர் கிருஷ்ணராசர்மா குடிபுடி தனிப்பட்ட அளவை கடந்து நிற்கும் நிறுவன அமைப்புகளை உருவாக்கும் கொள்கை முதல் அணுகுமுறை, மாநிலத்தின் வலுவாக அமைகிறது என்றும், இதை மற்ற மாநிலங்களும், பின்பற்றலாம், என்கிறார்.
ஆந்திராவின் ’எம்.எஸ்.எம்.இ மற்றும் தொழில்முனைவர் மேம்பாடு கொள்கை 4.0’, 2024 அக்டோபரில் ஏற்கப்பட்டது, ஒவ்வொரு வீட்டிலும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் ஒரு குடும்பம் ஒரு தொழில்முனைவர் எனும் நோக்கம் கொண்டுள்ளது.
மாநிலத்தின் புதுமையாக்கம் மற்றும் ஸ்டார்ட் அப் பாலிசி 2024-29 இந்த இலட்சியத்தை ஸ்டார்ட் அப் சூழலுக்கு கொண்டு செல்கிறது. ஐந்தாண்டுகளில் 20,000 ஸ்டார்ட் அப்’களை ஊக்குவிக்கும் இலக்குடன், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கிறது.
மேலும், ஐந்து பிராந்திய மையங்கள் கொண்ட ரத்தன் டாடா புதுமையாக்க மையம் அமராவதியில் நிறுவப்பட உள்ளது. நிதி மற்றும் முதலீடு அணுகலும் இது கொண்டிருக்கும். இந்த கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட போது, மாநிலம் 6,658 ஸ்டார்ட் அப்கள் கொண்டிருந்தது. இவற்றில் 1,158 பெண்களால் துவக்கப்பட்டது.
மாநிலம் முழுவதுமான சூழல்
இந்த வரைபடத்தில் மேலும் ஒரு அம்சம் இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான தொழில்நுட்ப சூழல் ஒற்றை நகரத்தில் அமைந்துள்ளன. ஆந்திரம் இதை மாநிலம் முழுவதும் விரிவாக்க விரும்புகிறது. விசாகப்பட்டினம் வடக்கு பகுதியில் ஐடி மற்றும் அறிவுசார் மையமாக உருவாகி வருகிறது. கூகுளின் ஏஐ மையம் அமைக்கப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமராவதி நகரம் தலைநகராக உருவாக்கப்பட்டு, குவாண்டம் வேலி டெக் பார்க்கை கொண்டுள்ளது. தென் பகுதியில் உள்ள ஸ்ரீ சிட்டி, மின்னணு மற்றும் கொரிய உற்பத்தியை ஈர்க்கும் காந்தமாக உள்ளது. 26 மாவட்ட தலைமையகங்களிலும் இணை பணியாற்றும் மையங்கள் உருவாக்கப்பட வேண்டும், என அரசு தெரிவித்துள்ளது. தலைநகரம் தாண்டி மாவட்டங்களில் வாய்ப்புகள் விரிகின்றன.
ஒரே நேரத்தில் உள்கட்டமைப்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்பதால் இது கடினமானது. ஆனால், விரிவடைந்த சூழல் நிறுவனர்கள் தங்கள் இருப்பிடம் அருகே இருக்க வழி செய்கிறது. இது குடிபெயர்தலை தவிர்க்கிறது. சூழல் எதற்காக உருவாக்கப்படுகிறது என்பதையும் மாற்றிக்காட்டுவதும் நோக்கமாக உள்ளது.
சிஐஐ ஆந்திரா முன்னாள் தலைவர் மற்றும் பிளுயன்கிரிட் சி.இ.ஒ. முரளி கிருஷ்னா ஞானமனி, பாரம்பரிய ஐடி சேவைகளில் இருந்து ஆழ் நுட்பம் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்கள் சார்ந்ததாக ஸ்டார்ட் அப் சூழல் மாறி வருகிறது என்றும், ஆழ் நுட்பத்திற்கான இந்தியாவின் ஆற்றல் மையமாக உருவாகி வருகிறது என்றும் கூறுகிறார்.
நிறுவனர்களுக்கான பதில்
ஆரம்ப கால முதலீட்டாளர்களிடம் என்ன தேவை, என கேட்டால் பலவித பதில்கள் கிடைக்கலாம். முதலீடு, திறமை, செலவு குறைந்த பணியிடம், இப்போது கம்ப்யூட்டிங் ஆற்றல் என பதில்கள் அமையலாம்.
கம்ப்யூட்டிங் பரப்பில் மாநிலம் பெரும்பாலான நிறுவனர்கள் விரும்பும் இரண்டு முக்கிய சொத்துகளை கொண்டுள்ளது. கூகுள் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் ஏஐ மையத்தை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் இதன் மிகப்பெரிய முதலீடாக அமையும், இந்த மையம் கிகாவாட் ஆற்றலை கொண்டு வர உள்ளது.
இதனிடையே, குவாண்டம் வேலி டெக் பார்க் அமராவதி நகரில், ஐபிஎம் மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய குவாண்டம் கம்ப்யூட்டராக இருக்கும், என சொல்லப்படும் இந்த வசதி ஸ்டார்ட் அப்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு வன்பொருள் வருவதற்கு முன் மேம்பட்ட கம்ப்யூட்டிங் சேவைக்கான கிளவுட் அணுகலை வழங்க உள்ளது. செப்டம்பர் மாதம் இது செயலாக்கம் பெற எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு மேல் தேசிய குவாண்டம் கம்ப்யூட்டிங் பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். குவாண்டம் திறன் சார்ந்த திறமை உருவாவதன் அடையாளமாக இது அமைகிறது.
உள்கட்டமைப்பு மற்றும் வழிகாட்டுதலில் மாவட்ட மற்றும் புதுமையாக மையங்கள் ஸ்டார்ட் அப் துவங்குவதற்கான செலவை குறைக்கின்றன. ஏபி ஸ்டார்ட் அப் ஒன் போர்டல், பதிவை எளிதாக்குகிறது. மூலதனம் மற்றும் சந்தை அணுகலை பொருத்தவரை, இந்தியா –கொரியா ஸ்டார்ட் அப் தாழ்வாரம் எனும் எண்ணத்தை ஐடி அமைச்சர் நர லோகேஷ் முன்வைத்துள்ளார். இது கொரியன் டெஸ்க் மற்றும் இணை இன்குபேஷன் மையம் கொண்டிருக்கும். ஏற்கனவே உள்ள நிறுவனர்களுக்கு இவை எல்லாம் உறுதி அளிக்கின்றன.
"விசாகப்பட்டத்தின் ஏஐ வர்த்தகத்தை உருவாக்கி வரும் நிறுவனர் என்ற முறையில் மாநிலம் செல்லும் திசை எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. தொழில்முனைவோர் நிறுவனங்களை உருவாக்கி வளர்த்தெடுப்பதை ஊக்குவிக்கும் சூழலை அரசு உருவாக்கி வருவதை பார்க்க முடிகிறது. இந்த வேகம் தற்போதைய செயலாக்கத்தில், வேகமான அனுமதி மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் வலுவான ஆதரவுடன் தொடரும் என்றால், ஆந்திரா நாட்டின் உற்சாகம் அளிக்கும் புதுமையாக்க மையமாக உருவாகும்,” என்கிறார் GAAP Tuff Glass LLP நிறுவனர், நிர்வாக பங்குதாரர், அஜய் மன்சுகொண்டா.
செயலாக்கத்தில் இந்த உறுதியை அரசு பகிர்ந்து கொள்கிறது. 2026 மார்ச்சில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திடுவது மட்டும் இலக்கு அல்ல, முதலீடுகள் செயலாக்கம் பெறுவதே முக்கியம் என்று ஐடி அமைச்சர் நர லோகேஷ் கூறினார். எத்தனை ஒப்பந்தங்கள் என்பதைவிட எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகின்றன என்பதே முக்கியம், என்றார்.
ஆந்திர மாநிலம் 23 மாதங்களில் ரூ.21.64 லட்சம் மதிப்பிலான 756 திட்டங்களை பெற்றுள்ளது. அனுமதி பெற்ற திட்டங்களுக்கு செப்டம்பர் மாதம், என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பொருளாதார போட்டி
அடுத்த பத்தாண்டுகள் எந்த மாநிலம் அதிக ஆலைகளை ஈர்க்கின்றன என்பதை பொருத்து அமையாமல், எந்த மாநிலம் அதிக தொழில்முனைவோரை உருவாக்குகிறது என்பதை பொருத்து அமையும். ஏஐ சார்ந்த பொருளாதாரத்தில் சில பெரிய நிறுவனங்களை மட்டுமே வேலைவாய்ப்பு நம்பியிருக்க முடியாது. இது ஆண்டுதோறும் உருவாகும் ஆயிரக்கணக்கான புதிய நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டும்.
ஆலைகள் வேலைகள் அளிக்கின்றன. நிறுவனர்கள் நிறுவனங்களை உருவாக்குகின்றனர். தொழில்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. உள்கட்டமைப்பு, திறமையாளர்கள், முதலீடு, ஆய்வு. கொள்கை, செயலாக்கம் ஆகியவற்றை ஒற்றைமுத்தியாக கொண்டு போட்டி மிக்க தொழில்முனைவு சூழலை உருவாக்கும் மாநிலங்களே வெற்றி பெறும்.
இதற்கான வரைபடத்தை ஆந்திரா உருவாக்கி வருகிறது. இந்தியாவுக்கான அளவுகோளாக அது உருவாகிறதா என்பது, முதலீட்டை ஈர்ப்பதில் மட்டும் அல்ல, மாநிலத்திற்குள் நிறுவனங்களை உருவாக்க விரும்பும் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர்களை சார்ந்து இருக்கிறது.
ஏனெனில், வரும் ஆண்டுகளில் ஒரு மாநிலம் உருவாக்கும் மிக மதிப்பு மிக்க சொத்தாக, அது ஈர்க்கும் ஆலைகளாக அல்லாமல் அது உருவாக்கும் நிறுவனர்களாகவே இருப்பார்கள்.
ஆங்கில கட்டுரையாளர்கள்: ஷரத்தா சர்மா, பிரேம் மனுகொண்டா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

