கல்லூரி அறையில் இருந்து ஏரோஸ்பேஸ் உற்பத்திக்கு முன்னேறிய சாதனை இளைஞர்கள்!
Ethereal Machines தனது சொந்த பை ஆக்சிஸ் சிஎன்சி மெஷின்களை உருவாக்கி, தேவைக்கேற்ப ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட துறைகளுக்கு வழங்குவதன் மூலம் இந்தியாவின் துல்லிய உற்பத்தை எதிர்காலத்தை வடிவமைக்கிறது.
ஆய்வு சார்ந்த புதுமையாக்கத்திற்கான உலக மையமாக இந்தியா உருவாகி வருவது தொடர்பாக அதிகரித்து வரும் பார்வை, மத்திய கல்வி அமைச்சகத்தின் 'பாரத் இன்னவேட்ஸ் 2026'ல் முழுவீச்சில் வெளிப்பட்டது. ஆழ்நுட்பம், மற்றும் ஆய்வு சார்ந்த 120 ஸ்டார்ட் அப்கள், முதலீட்டாளர்கள், தொழில் தலைவர் முன்னிலையில் காட்சிப்படுத்தும் இந்நிகழ்ச்சி பிரான்ஸ்ன் நைஸ் நகரில் 11 முதல் 16 வரை நடைபெற்றது.
தேசிய கல்வி கொள்கை 2020 உள்ளிட்ட சீர்திருத்தங்கள் மற்றும் ஆய்வு, தொழில்முனைவு மற்றும் தொழில்துறை கூட்டு முயற்சி ஆகியவற்றில் கவனம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்தியாவில் உருவாக்கும் புதுமையாக்க சூழலை காட்சிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்த தேர்வு செய்யபட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான பெங்களூருவைச் சேர்ந்த ’எத்திரியல் மெஷின்ஸ்’ (Ethereal Machines), கவுசிக் மட்டா (Kaushik Mudda) மற்றும் நவீன் ஜெயின் ஆகியோரால் நிறுவப்பட்டது. நிறுவனம் இப்போது பை ஆக்சிஸ் மிஷின் சிஸ்டம்களை உருவாக்கி, தேவைக்கேற்ற உற்பத்தி மேடையையும் இயக்கி வருகிறது.
ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு, சுகாதார நலன், நுகர்வோர் மின்னணு உள்ளிட்ட துறைகளுக்கு இந்த சேவைகளை அளிக்கிறது. எச்.ஏ.எல்., பெல் மற்றும் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சேவை அளிக்கிறது.
இதன் பயணம் 2013ம் ஆண்டு துவங்கியது. ஆர்வி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மின் பொறியியல் மாணவர்கள் தங்கள் அறையில் இருந்து பை ஆக்சிஸ் சிஎன்சி மெஷினை உருவாக்க தீர்மானித்தனர். ஓராண்டில் முடித்துவிடலாம், என நினைத்த நிலையில் இதற்கு நான்காண்டுகளுக்கு மேல் ஆனது. இதனிடையே, இத்தகைய அமைப்புகளை ஜெர்மனி மட்டும் ஜப்பானில் தான் உருவாக்க முடியும் என்று சொல்லப்பட்டதை மீறி அவர்கள் உறுதியாக இருந்தனர்.
இவர்களின் கதை பெரியதொரு மாற்றத்தின் அங்கமாக அமைகிறது. இந்தியாவின் உயர்கல்வி அமைப்பில் முக்கிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தேசிய கல்வி கொள்கை 2020 கல்வி நிறுவனங்களை மேம்பட்ட ஆய்வு மற்றும் தொழில்துறை கூட்டை நோக்கி நகர்த்தி வருகிறது.
கல்வி மற்றும் ஆய்வு கூட்டு மேம்பாட்டிற்கான திட்டம் - SPARC, இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் 28 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடனான திட்டங்களுக்கு நிதி அளிக்கிறது. மேலும், இந்தியாவில் கல்வி கற்பதற்கான திட்டம் சர்வதேச மாணவர்களை இந்திய கல்லூரிகளுக்கு அழைத்து வருகிறது.
இதன் பலன் சர்வதேச தரவரிசை பட்டியலில் பிரதிபலிக்கிறது. கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவர்சை 2026ல், 54 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ருள்ளன. ஐஐடி மெட்ராஸ், ஐஐடி தில்லி, ஐஐஎஸ்.சி பெங்களுரு உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் முன்னேறியுள்ளன. இதன் மூலம் இந்தியா ஜி20 நாடுகளில் வேகமாக வளரும் உயர் கல்வி அமைப்பாக இருக்கிறது. இந்த உத்வேகத்தை அடித்தளமாக கொண்டு பாரத் இன்னவேட்ஸ் 2026 அமைகிறது.
இந்த உதேவகமான கதைக்கு மத்தியில், மட்டா மற்றும் ஜெயினின் வெற்றிக்கதை மாறுபட்ட கதையாக அமைகிறது. அவர்கள் இன்குபேட்டர் ஆதரவோ, கல்வி நிறுவன ஆதரவோ இல்லாமல், பொறியியல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வேட்கையை மட்டும் அடிப்படையாக கொண்டு செயல்பட்டனர்.
நான்கு ஆண்டுகள்
'பை ஆக்சிஸ்' சிஎன்சி மெஷினை துவக்கத்தில் இருந்து உருவாக்குவது என்பது வென்பொருள், மின்னணு மற்றும் துல்லியமான கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் தீர்வு காணப்பட வேண்டியதாக இருக்கிறது. இதற்கு தேவையான உள்நாட்டு திறனும் இருக்கவில்லை. இவர்களின் விடாமுயற்சியின் பலனாக, உலகின் முதல் பை ஆக்சிஸ் டெஸ்க்டாப் சிஎன்சி மிஷின் எத்திரியல் ஹாலோ உருவானது.
3டி பிரிண்டிங் ஒருங்கிணைப்பு வசதியும் கொண்டிருந்தது. ஒரே அமைப்பில் சப்ட்ராக்டிவ் மற்றும் அடிட்டிவ் உற்பத்தி வசதிகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த ஹாலோ மெஷின் பொறியாளர்கள் பல்வேறு மெஷின்கள், செயல்முறைகளுக்கு பதிலாக ஒரே அமைப்பில் சிக்கலான பாகங்களை உருவாக்க வழி செய்தது.
சி.இ.எஸ். 2019 கண்காட்சியில், ஹாலோ சிறந்த இன்னவேஷம் விருது வென்றது. இந்த கவுரவம் பெறும் முதல் இந்திய நிறுவனமாக அமைந்தது.
பாகங்கள் உற்பத்தியை நோக்கி
இந்த மெஷின் இயங்குவதை பார்த பிறகும் கூட, பல இந்திய வாடிக்கையாளர்கள் வாங்கத் தயங்கினர். துல்லியமான உற்பத்தி என்பது வெளிநாட்டி நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியம் என நினைத்தனர்.
இந்த எதிர்ப்பு உணர்வை மாற்ற முயற்சிப்பதற்கு மாறாக நிறுவனம் தனது வர்த்தக மாதிரியை மாற்றியது. மிஷின்களை விற்பதற்கு பதில் நிறுபனம் அதை மிஷின் ஆஸ் ஏ சர்வீஸ் அடிப்படையில் உள்ளுக்குள் பயன்படுத்த துவங்கியது. வாடிக்கையாளர்கள் தங்கள் கேட் கோப்புகளை பதிவேற்றி, அதற்கேற்ற விவரங்களை உடனடியாக பெற்று, தாங்கள் மிஷினை இயக்காமலே பாகங்களை பெற்றுக்கொள்ள வழி செய்தது. அலுமினியம், டைட்டானியம், தாமிரம் மற்றும் உயர் செயல்பாடு பிளாஸ்டிக் ஆகியவற்றை இயக்கக்கூடியதாக இந்த மேடை அமைந்துள்ளது.
அடுத்த தொழில் அடுக்கு
நிறுவனம் இந்தியாவின் முதல் மல்டி ஆக்சிஸ் சி.என்.சி கண்ட்ரோலரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நாட்டின் தொழில் சூழலுக்கு முக்கிய நுட்பமாக இது அமையும். பெங்களூருக்கு வெளியே 25,000 சதுர அடி ஆலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. உற்பத்தி மையம் மற்றும் ஆய்வு மையமாக இது செயல்படும்.
இந்த விரிவாக்கத்திற்காக நிறுவனம் ஏ சுற்றில் 13 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. பீக் எக்ஸ்வி பாட்னர்ஸ் மற்றும் ஸ்டெட்வியூ கேபிடல் தலைமையிலான இந்த சுற்றில் ப்ளும் வென்சர்ஸ் பங்கேற்றது.
நிறுவனம் தற்போது பெங்களூருவில் 55,000 சதுர அடி ஆலையை கொண்டுள்ளது. எதிர்வரும் ஆலைக்காக கர்நாடக மாநில அரசுடன் புரிந்துணர்பு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
தொழில் பயணம்
மட்டா மற்றும் ஜெயின் 2014ல் பொறியியல் பட்டம் பெற்றனர். முதல் ஆர்டரை பெறுவதற்கு முன் பல நிராகரிப்புகளை எதிர்கொண்டனர். ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் இல்லாமல் வாய்மொழி விளம்பரத்தில் செயல்பட்டனர். ஐஐடி மெட்ராஸ் உடன் தொடர்பு கொண்ட தேவதை முதலீட்டாளர்களின் ஆரம்ப நிதி வளர்ச்சிக்கு உதவியது. எனினும், விடாமுயற்சி மற்றும் பொறியியல் திறனே அடித்தளமாக அமைந்தது.
2019ல் ஃபோர்ப்ஸ் பத்திரையின் ஆசியா 30 அண்டர் 30 பட்டியலில் எத்திரியல் மிஷின்ஸ் இடம்பெற்றது. இந்தியாவால் உருவாக்க முடியாது என பலரும் சந்தேகித்த உற்பத்தி முறையை பாடுபட்டு செயல்படுத்திக்காட்டி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா ஆழ்நுட்ப இலட்சியம் முன்னணி கல்வி ஆய்வு வளாகங்களுக்கு வெளியேவும் நிகழும் என்பதையும் இந்த கதை உணர்த்துகிறது.
இந்த ஸ்டார்ட் அப்பை கல்வி அமைக்கம் அங்கீகரித்துள்ளது பரவலான இலட்சியத்தை உணர்த்துகிறது: அதி நவீன உற்பத்தி நுட்பம் இந்தியாவில் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளிப்பதாக அது அமைகிறது.
ஆங்கிலத்தில்: கேண்டிடா டிசில்வா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

