சிங்கப்பூர் வழக்கில் பைஜு ரவீந்திரனுக்கு தற்காலிக நிவாரணம்!
பைஜூஸ் நிறுவனர் பைஜு ரவீந்தரனுக்கு சிங்கப்பூர் வழக்கில் தற்காலிக நிவாரணம் கிடைத்திருந்தாலும், அவரது சட்ட சிக்கல்கள் தொடர்கின்றன.
பைஜூஸ் நிறுவனர் பைஜு ரவீந்தரனுக்கு சிங்கப்பூர் வழக்கில் தற்காலிக நிவாரணம் கிடைத்திருந்தாலும், அவரது சட்ட சிக்கல்கள் தொடர்கின்றன.
சிங்கப்பூர் நீதிமன்றம் அவர் மீதான சிவில் அவமதிப்பு தீர்ப்பின், சரண் பகுதிக்கு தடை வித்திருப்பதாகவும், எனவே, அவர் சரணடைய வேண்டாம் மற்றும் அவரது சிறைவாசம் மேல்முறையீடு நிலுவையில் உள்ள காலத்தில் அமலுக்கு வராது, என்றும் அவரது வழக்கறிஞர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரவீந்திரம் மற்றும் நிறுவனர்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் மெக்நட்,
“சிங்கப்பூர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின் ஒரு பகுதி கசிந்ததை அடுத்து. ரவீந்திரனுக்கு எதிராக கைது வாரணட் பிறப்பிக்கப்பட்டது போன்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது தவறானது,” என கூறியுள்ளார்.
கைது வாரண்ட் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், முந்தைய தீர்ப்பின் படி, ஜூன் 15ம் தேதி அவர் ஆஜராகி இருக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் முதலீடு ஆணையம் தொடர்பான கடன் வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ரவீந்திரன் முறையீடு செய்ய மே மாதம் திட்டமிட்டுருந்தார். ரவீந்திரன் ஈட்டுறுதி அளித்திருந்த கடன் தொகை தொடர்பாக இந்த வழக்கு அமைவதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பைஜூஸ் நிறுவனம் கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவின் முன்னணி கல்வி நுட்ப நிறுவனமாக உருவாகி, 2022ல் 22 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு கொண்டிருந்த நிலையில் பின்னர் நிதி பிரச்சனைகளில் சிக்கியது.
நீதிமன்ற உத்தரவு, தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கு தொடர்பானது என்றும், இது கிரிமினல் வழக்கு தொடர்பானது அல்ல என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த உத்தரவு நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியாததேத் தவிர மோசடி தொடர்பனாது அல்ல. இந்த வழக்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதை இதன் அடிப்படையில் நிறுவன வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.
“சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய இந்த தடை உத்தரவை வரவேற்கிறேன். பிரச்சனையில் தொடர்புடையவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தவறான எண்ணம் உருவாக்கப்படுகிறது,” என பைஜு ரவீந்திரன் கூறியுள்ளார்.
பிரச்சனைக்குறிய இந்த நிதியில், தானோ நிறுவனர்களோ எந்த பங்கும் கொண்டிருக்கவில்லை என கூறியுள்ளார். இது பரவலாக கோரப்படும் ஒரு பிரச்சனையின் அங்கம் என்றும், சிங்கப்பூர் வழக்கு, பைஜூஸ் தொடர்பான கடன் திவால் வழக்கிற்குள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடை உடனடி நெருக்கடியை தளர்த்தியிருந்தாலும், பிரச்சனையின் திசையை மாற்றிவிடவில்லை. உடனடி சரண் நிலையை மாற்றியுள்ளது. என்றாலும், ஈட்டுறுதி மற்றும் கடன் தொடர்பான பிரச்சனை நிலுவையில் உள்ளது. தொடரும் சட்ட சிக்கலில் இந்த உத்தரவு தற்காலிக நிவாரணமாக மட்டும் அமைகிறது.
யுவர்ஸ்டோரி குழு
Edited by Induja Raghunathan

