பேடிஎம் பேமெண்ட் வங்கியை மூட தில்லி கோர்ட் உத்தரவு - ரிசர்வ் வங்கி தகவல்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், விதிமுறைகளை பின்பற்ற தவறிய காரணத்தினால், பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு (PPBL) வழங்கப்பட்டிருந்த வங்கிச் சேவை உரிமைத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. வங்கி விவகாரங்கள் டெபாசிட்தாரர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
பேடிஎம் பேமெண்ட் வங்கியை மூடிவிட தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், விதிமுறைகளை பின்பற்ற தவறிய காரணத்தினால், பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு (PPBL) வழங்கப்பட்டிருந்த வங்கிச் சேவை உரிமைத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. வங்கி விவகாரங்கள் டெபாசிட்தாரர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த வங்கியை மூடும் செயல்முறைக்காக தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டேட் வங்கியின் முன்னாள் முதன்மை பொது மேலாளர் கிரிகுமார் எம் நாயர், பேடிஎம் பேமெண்ட் வங்கியின் லிக்விடேட்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
"2026 ஜூலை 8ம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவுபடி, ஜூலை 22 2026, பிறப்பிக்கப்பட்ட உத்தரவுடன் சேர்த்து வாசிக்கப்பட்டதன் படி, தில்லி உயர்நீதிமன்றம் கம்பெனிகள் சட்டம் 2013 தொடர்புடைய ஷரத்துகளுக்கு ஏற்ப பொருத்தி பார்க்கும் வகையில், வங்கிச்சேவை ஒழுங்குமுறை சட்டம் 1949 ஷரத்துகளின் கீழ் பேடிஎம் பேமெண்ட் வங்கியை கலைத்து அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது,” என ரிசர்வ் வங்கி இது தொடர்பாக தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கான லிக்விடேட்டரையும் உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் படி, கம்பெனிகள் சட்டம் 2013 பொருத்தமான ஷரத்துகளுடன், வங்கிச்சேவை ஒழுங்குமுறை சட்டம் 1949 ல் தொடர்புடைய ஷரத்துகள் கீழ் லிக்விடேட்டர் அனைத்து அதிகாரங்களையும் செயல்படுத்துவார், என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் படி, ஜூலை 8 முதல் லிக்விடேட்டர் தனது அதிகாரத்தை செயல்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்சேகர் சர்மாவின் நிதி நுட்ப நிறுவனமான பேடிஎம் துணை நிறுவனமாக பேடிஎம் பேமெண்ட் வங்கி துவக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் பல முறை ரிசர்வ் வங்கி கண்காணிப்பு உள்ளானது. 2022 மார்ச்சில் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்தது.
வங்கியின் உரிமத்தை ரத்து செய்த போது, வங்கியின் செயல்பாடுகள் டெபாசிட்தாரர்கள் நலனுக்கு எதிராக அமைந்திருந்தாக தெரிவித்தது.
முன்னதாக, வங்கி செயல்பாடுகளில் கண்காணிப்பு நோக்கில் விதிமுறை மீறல்கள் தெரிய வந்ததை அடுத்து 2022 மார்ச் 11 ல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது.
வங்கி அதன் ஐடி அமைப்புகளை முழுமையாக ஆடிட் செய்ய ஐடி ஆடிட் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
அதன் பிறகு, 2024 ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 16 ல் வங்கிக்கு மேலும் சில வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் படி, ஏற்கனவே உள்ள கணக்குகள் மீது டெபாசிட் அல்லது கிரெடிட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
செய்தி – பிடிஐ
Edited by Induja Raghunathan

